வெள்ளி, 28 மார்ச், 2014

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு  Health in order to stay healthy, so many things to observe, to learn to live a few suppressed.நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது  நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும்  வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். 

உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில்  வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான  பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா  என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்: கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற  பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்: கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை: எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட  வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை  பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ,  அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது  பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு: சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா  உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி: எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில்  மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின்  போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு: பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும்.  இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு  அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

மூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள்  வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில  சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

சர்க்கரை வியாதியின் சரித்திரம்

1. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

2. பழங்கால இந்தியர்கள் சர்க்கரை நோயை கண்டுபிடிக்க, ஒருவரின் சிறுநீரை எறும்புகள் மொய்க்கிறதா இல்லையா என்பதை கவனித்தனர்.

3. ஆயுர்வேத தூண்களான சரகர், சுஷ்ருதர் இவர்களுக்கு இந்த குறைபாட்டின் பாரம்பரியத் தன்மை மட்டுமின்றி, அதிக தாகம், வாய் உலர்வது, சிறுநீரில் சர்க்கரை இருப்பது போன்ற அடையாளங்கள் தெரிந்திருந்தன. இளவயது நீரிழிவு, வயதாகி வரும் நீரிழிவு நோய்களின் வித்யாசங்களை அறிந்திருந்தனர். சிகிச்சை முறைகள், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டன. இந்த நோயை அவர்கள் ‘மதுமேகம்’ – இனிப்பு சிறுநீர் வியாதி என்று அழைத்தனர். சர்க்கரை நோயை குறிப்பிட சீனர்கள், கொரியர்கள், மற்றும் ஜப்பானியர்கள் இதே அர்த்தத்தை குறிக்கும் வார்த்தைகளை தங்கள் மொழிகளில் பயன்படுத்தினர்.

4. இந்த சிறுநீர் இனிப்பாக மாறுவது பழங்கால கிரேக் கர்களுக்கும், சீனர்களுக்கும், எகிப்தியர்களுக்கும் தெரிந்திருந்தது. கி.மு.1500ல் எகிப்தியர் எழுத உபயோகித்த பாப்யூரஸ் (Papyrus) ஓலைச்சுவடிகளில் அதிக சிறுநீர்கழிப்பது (Polyuria) பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

5. “டயாபடீஸ்” என்ற வார்த்தையை கப்பாடோசியாவை (Cappadocia) சேர்ந்தவரான அரிடேயஸ் (Aretaeus) அறிமுகப்படித்தினார். ஊடுருவல், உட்செல்வது இதன் அர்த்தம். செல்சஸ் (Celsus) என்னும் மருத்துவர் டயாபடீஸ் பற்றிய மருத்துவ ரீதியான விவரங்களை வெளியிட்டார். அரிடேயஸ்ஸீம், செல்ஸஸ§ம் கி.பி. 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு நோயின் காரணங்கள் தெரியவில்லை.

6. ஆங்கிலத்தில், 1425ம் ஆண்டில் எழுதப்பட்ட மருத்துவ நூலில் டயாபடீஸ் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது.

7. 1675ல் தாமஸ் வில்லீஸ், டயாபடீஸ் என்ற வார்த்தையுடன், மெல்லிடஸ் (Mellitus) என்ற வார்த்தையையும் இணைத்தார். மெல்லிடஸ் என்றால், லத்தீன் பாஷையில் ‘தேன்’ என்று அர்த்தம். தாமஸ் வில்லீஸ், சிறுநீரில் வெளியாகும் சர்க்கரை, ரத்தத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டுமென்று நிர்ணயித்தார்.

8. 1776ல் மாத்யூ டாப்சன் (Mathew Dobson), சிறுநீர் இனிக்கும் காரணம், சிறுநீரிலும், ரத்தத்திலும் ஒரு வகை சர்க்கரை சேர்ந்திருப்பதே என்று உறுதியாக சொன்னார்.

9. நீரிழிவு நோய்க்கும் கணணயத்துக்கும் சம்மந்தம் உண்டு என்று கூறியவர் கான்லே.

10. 1796ல் உணவுக்கட்டுபாடு, நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம் தேவை என்றார் ரோலிலே என்பவர்.

11. 1841ல் பொசார்டார்ட், உணவு முறை மாற்றம் நீரிழிவை கட்டுப்படுத்த அவசியம் தேவை என்று வலியுறுத்தினார்.

12. மாவுச்சத்தால் ஆன உணவைப் பற்றியும், அது ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும், கல்லீரலில் கிளைகோஜின் இருப்பதையும் முதலில் கண்டுபிடித்தவர் கிளாண்ட் பெர்னார்ட்.

13. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஜெர்மானிய டாக்டர் மான்யூ, புகழ் பெற்ற நீரிழிவு ஆராய்ச்சி நிபுணர். இது பரம்பரை வியாதி என்று சொன்னவர் அவர்.

14. நீரிழிவு வியாதி உடலின் பலகுறைபாடுகளின் மொத்த வெளிப்பாட்டே என்ற கண்டுபிடிப்பு அமெரிக்க டாக்டர் பிரடெரிக் எம். ஆலனால் தெரிய வந்தது.

15. 1869ல் பால் லாங்கர்ஹான் (Langer Hans), என்ற ஜெர்மானிய விஞ்ஞானி கணைய தசைகளில் உள்ள சிறுதீவுகள் (Islets) என்ற பகுதியை கண்டுபிடித்தார். இது ஒரு முக்கிய மைல்கல். இவர் பெயரே இந்த தீவுகளுக்கு வைக்கப்பட்டது.

16. 1889ல் கணையத்திற்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள சம்மந்தத்தை திட்டவட்டமாக நிரூபித்தவர்கள் ஜோசப் வான் மெரிங் (Joseph Von Mering) மற்றும் ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி (Osker Minkowski) என்ற ஜரோப்பிய விஞ்ஞானிகள் நாய்களின் கணையத்தை அறுவை சிகிச்சையால் எடுத்து விட்ட பிறகு பார்த்ததில் நீரிழிவு வியாதிக்கான அறிகுறிகள் அனைத்தும் நாய்களுக்கு தோன்றின. நாய்கள் இறந்தும் விட்டன. நீரிழிவு கணையத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று சொன்னவர்கள் இவர்கள்.

17. 1910ல் சர் எட்வர்ட் ஆல்பர்ட் ஷார்பே – ஷா ஃ பர் (Sir Edward Albert Sharpey – Schafer) என்ற எடின் பர்க்கை சேர்ந்த விஞ்ஞானி, நீரிழிவு நோயாளிகள், கணையத்திலிருந்து உண்டாகும் ஒரு வேதிப்பொருளின் குறைபாடு உடையவர்கள் என்பதை தெரிவித்தார். இந்த வேதிப்பொருளை இன்சுலின் என்று அழைக்கலாம் என்று கூறியவர் இவர். லத்தீன் பாஷையில் இன்சுலா என்றால் ‘தீவு’ என்று அர்த்தம். கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் “தீவு” களை இந்த வார்த்தை குறிப்பிடுகிறது.

18. 1921, நீரிழிவு நோயாளிக்கு பெரும் நிவாரணத்தை அளித்த ஆண்டு. வான் மெரிஸ் மற்றும் மின்கோவ்ஸ்கி ஆரம்பித்த ஆராய்ச்சியை தொடர்ந்த சர் பிரடெரிக் கிராண்ட் பேன்டிங் (Sir Frederick Grant Banting) மற்றும் சார்லஸ் ஹெர்பர்ட் பெஸ்டும் (Charles Herbert Best) மேலும் முன்சென்று, நாய்களுக்கு உண்டாக்கப்பட்ட நீரிழிவு வியாதியை, ஆரோக்கியமான நாய்களின் கணைய “தீவு” களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பொருளால் குணப்படுத்த முடியுமென்று நிருபித்து காட்டினர். இந்த இருவருடன் கோல்லிப் (Collip) என்ற இராசயன நிபுணரும் (Chemist) சேர்ந்து, டோரண்டோ பல்கலைகழகத்தில், மாடுகளின் கணையத்திலிருந்து இன்சுலினை எடுத்து சுத்தப்படுத்தி காட்டினர். முதல் நோயாளி, 1922ல் இன்சுலின் ஊசியை போட்டுக் கொண்டார். இவ்வாறு ஆரம்பித்தது இன்சுலின் சிகிச்சை இதற்காக பாண்டிங் மற்றும் பரிசோதனை கூடத்தின் டைரக்டர் மேக்லியாட் (Macleod) இருவருக்கும் 1923-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

19 இந்த இருவர்களின் பெருந்தன்மையை பாருங்கள். இவர்களுக்கு கிடைத்த நோபல் பரிசை ஆராய்ச்சி குழுவில் இருந்த அனைவருடனும் (முக்கியமாக பெஸ்ட் மற்றும் கோல்லிப்புடன்) பகிர்ந்து கொண்டனர். இது மட்டுமல்ல, இன்சுலின் கண்டுபிடிப்பை Patent (தனி உரிமை) செய்து அவர்கள் விற்கவில்லை. அதன் செய்முறையை இலவசமாக வழங்கினர். இன்சுலின், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுவதற்கும் அவர்கள் கட்டுப்படுத்தாமல் சம்மதம் தெரிவித்தனர். இதனால் இன்சுலின் சிகிச்சை உலகெங்கும் வேகமாக பரவியது.

20. தற்போது டைப் 1, டைப் 2 என்றழைக்கப்படும் நீரிழிவு நோயின் பிரிவுகளின் வித்தியாசத்தை துல்லியமாக, 1936ல் எடுத்துக்காட்டியவர் சர் ஹெரால்ட் பெர்சிவல் ஹிம்ஸ்வொர்த் (Sir Harold Percival Himsworth).

21. 1942ல் ஸல்ஃபோனைலிரியாஸ் (Sulfonylureas) மருந்துகள் அடையாளம் காட்டப்பட்டன.

22. இன்சுலினின் புரத வரிசையை (Amino acid sequence) கண்டுபிடித்தவர் ஸர் ஃப்ரெடரிக் சான்ஜர் (Sir Frederick Sanger). இதற்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

23. சில நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின், எதிர்மறை விளைவுகளை – அதாவது இன்சுலின் எதிர்க்கும் ஆன்டி – பாடீஸ் – (anti bodies) உருவாக்கும். (antibodies -பாக்டீரியாக்களை அழிப்பதற்கான இரத்தத்தில் உண்டாக்கப்படும் பொருள்). இந்த ஆன்டி - பாடீஸ் இன்சுலினுடன் சேர்ந்துவிடும். டிரேசர் இன்சுலின் எனும் பொருளால் ரத்தத்திலுள்ள குறிப்பிட்ட anti bodies அளவை நிர்ணயிக்க முடியும். இந்த செய்முறை Radioimmuoassay எனப்படும். இதைக் கண்டுபிடித்தவர்கள் ரோஸ்லின் யல்லோ (Rosalyn yallow) மற்றும் சாலமோன் பெர்சன் (Solomon Bersen) இதற்காக யல்லோவுக்கு 1977ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பிச்சைக்காரர் சொன்ன தத்துவம்!!!

ஒருவர் வாரந்தோறும் கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 6 மாதம் கழிந்த பிறகு, அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 75 பைசாக்கள் மட்டும் போட்டார்.
ஒரு வருடம் கழித்தது. இப்போது அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 50 காசுகள் மட்டும் போட்டார். அடுத்த 2 
வருடங்களில் இதுவும் குறைந்து அவர் பிச்சைக்காரனுக்கு 25 காசுகள் மட்டுமே போட்டார்.

இத்தனை நாள் பொறுத்த பிச்சைகாரன்(ர்), (அவருக்கும் வயசாகிடுச்சில்ல!) ஏன் இப்படி படிப்படியாக குறைந்த காசுகளைப் பிச்சை போடுகிறார் எனக் கேட்க, அந்த மனிதரும் ஸின்ஸியராக, 'மிஸ்டர் பெக்கர், முதலில் நான் பேச்சிலர், 1 ரூபாய் போட்டேன், பிறகு கல்யாணமாச்சு, பெண்டாட்டியையும் கவனிக்கணும், 75 காசு போட்டேன், பிறகு குழந்தை பிறந்தது, 50 காசு போட்டேன். இப்போ அந்தக் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கக் காசு சேமிக்க வேண்டியிருக்கு, அதனால் 25 காசு போடறேன்' என்றார்.

பிச்சைக்காரர் யோசித்தார். 'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்!

சனி, 15 மார்ச், 2014

மனைவிக்கு அல்வா வாங்கி கொடுப்பதன் ரகசியம் தெரியுமா ...?

மனைவிக்கு அல்வா வாங்கி கொடுப்பதன் ரகசியம் தெரியுமா ...?


அந்த காலத்தில் பலகார வகைகளில் முறுக்கு, சீடை, கெட்டி உருண்டை, பக்கோடா, மிக்சர், காராசேவு போன்ற காரவகைகளும், அல்வா, பூந்தி, ஜாங்கிரி, லட்டு போன்ற இனிப்பு வகைகளும் மட்டுமே உண்டு மேற்சொன்ன காரவகைகளில் எதை வாங்கி சாப்பிட்டாலும் மொறு மொறு என்று சத்தம் வரும் . ஜாங்கிரி, பூந்தி, லட்டு போன்ற இனிப்பு வகைகள் சாப்பிடும் போது கீழே உதிர்ந்து விழும்…



இதனை எறும்புகள் இழுத்து செல்லும் போது மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம் ஆனால் அல்வா என்பது சத்தம் வராமலும், கீழே உதிராமலும், நல்ல இனிப்புடனும் இருக்கும்..பெற்றோருக்கோ, மற்றவர்களுக்கோ தெரியாமல் ரகசியமாக கமுக்கமாக சாப்பிட அல்வா மட்டுமே உகந்தது.
வீட்ல இருக்கவங்களுக்கு கொஞ்சம் கொடுத்துட்டு சாப்பிட்டா கொறைஞ்சி போயிடும்னு என்னா கிரிமினலா யோசிச்சு இருக்காய்ங்க பய புள்ளைய.. பாருங்க….

இப்போதுள்ள சந்ததியினருக்கு சப்தம் வராமல் சாப்பிட நிறைய அயிட்டங்கள் கிடைக்கிறது..பெங்காலி ரசகுல்லா, குலோப் ஜாமூன் போன்றவை நல்ல பலன் தரும்..சாப்பிடும் பொது வழியும் ஜீராவை நேரடியாக நாமும் சுவைக்கும் வசதி இவைகளில் உள்ளது….!