செவ்வாய், 31 டிசம்பர், 2013

உணவை ஜீரணம் செய்வது எப்படி? 2

நன்றி அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
4.உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்து உண்ண வேண்டும்.
நாம் சாப்பிடும் பொழுது உணவைப் பற்களால் நன்கு அரைத்துச் சாப்பிட வேண்டும். உணவைப் பற்களால் அரைக்காமல், நொறுக்காமல் யார் யாரெல்லாம் குண்டு குண்டாக அப்படியே விழுங்குகிறார்களோ, அவர்களுடைய வயிறு அவர்களை ஒரு கேள்வி கேட்கும். “அரைப்பதற்கு என்னிடம் பல்லா இருக்கிறது? அல்லது வயிற்றில் என்ன மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன? அல்லது வயிற்றில் கிரைண்டர் போல் கல் இருக்கிறதா?” என்று வயிறு நம்மைப் பார்த்துக் கேட்கும். வயிற்றில் பற்களும் இல்லை, பிளேடுகளும் இல்லை, கல்லும் இல்லை. பிறகு நாம் சாப்பிடும் உணவை வயிறு எப்படி ஜீரணம் செய்கிறது என்றால், வயிறு என்பது ஒரு குடம் போல. வயிற்றில் Hydrocloric Acid (HCL) என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணம் செய்கிறது. இந்த அமிலத்தின் சக்தி என்னவென்றால், நம் வயிற்றில் பசிக்கும் பொழுது சுரக்கும் பிசிலி அமிலத்தை எடுத்து ஓர் இரும்பின் மேல் ஊற்றினால் இரும்பே உருகும். நம் உள்ளங்கையில் ஊற்றினால் உள்ளங்கையில் ஓட்டை விழுந்து விடும். இப்படி இரும்பையே உருக்கும் சக்தி வாய்ந்த அமிலம் தான் ஒவ்வொரு முறை பசிக்கும் பொழுதும் நம் இரைப்பையில் உற்பத்தியாகிறது.
இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையை ஒன்றும் செய்யாதா என்று சந்தேகம் வரும். இரைப்பையிலிருக்கும் இந்த அமிலத்திற்கு இடையே முயூக்கஸ் என்ற ஒரு சளிப்படலம் இருக்கும். இந்தச் சளிப்படலம் தான் அமிலத்தை இரைப்பையுடன் சேராமல் இரைப்பைக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கிறது. பசி எடுத்த பிறகு நீண்ட நேரமாகச் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் சுரந்த அமிலம், தான் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் இந்த முயூக்கஸ் சளிப்படலத்தைச் சாப்பிட ஆரம்பிக்கும். இப்படிப் பசி எடுத்து சாப்பிடாமல் வயிற்றைக் காயப் போடும் நபர்களுக்குச் சிறிது காலத்துக்குப் பிறகு இந்த அமிலம் சளிப் படலத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் இரைப்பையைத் தொடும். இரும்பை உருக்கும் அமிலம் இரைப்பையைத் தொட்டவுடன் இரைப்பை பாதித்துப் புண் ஏற்படும். அப்பொழுது அதி பயங்கரமாக வயிற்று வலி ஏற்படும். இதையே அல்சர் என்று கூறுவார்கள்.
அல்சர் வராமல் இருப்பதற்கு நேரம் நேரம் ஒழுங்காக நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று உலக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யார்யாரெல்லாம் நேரம் நேரம் பார்த்து ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு தான் அல்சர் வரும். நேரம் பார்த்துச் சாப்பிட்டால் அல்சர் வரும். பசி எடுத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். நேரம் பார்த்துச் சாப்பிடுவதற்கும் பசி எடுத்துச் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாக காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு சாப்பிடுகிறார். அவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். பகல் 2மணி ஆனவுடன் அவர் சரியான நேரம் பார்த்துப் பசி இல்லாத போது சாப்பிட்டால் என்ன ஆகும்? ஏற்கெனவே ஜீரணமாகாத உணவு வயிற்றில் இருக்கும் பொழுது அதுவும் கெட்டுப் போகும். புதிதாக சாப்பிடப் போகும் புதிய உணவும் கெட்டுப் போகும். இதே போல் காலை பத்து மணிக்கு ஒருவர் உணவு எடுத்துக் கொள்கிறார். அதிக வேலை செய்கிறார். பகல் பன்னிரண்டு மணிக்கு நன்றாகப் பசிக்கிறது. இவர் நான் நேரம் பார்த்துதான் சாப்பிடுவேன் என்று இரண்டு மணி வரை தாமதமாகக் காத்திருந்தால் இந்த இரண்டு மணி நேரத்தில் அமிலம் இரைப்பையைப் புண்ணாக்க வாய்ப்பு உள்ளது. எனவே நேரம் பார்த்துச் சாப்பிடுவது நோய். பசி எடுத்துச் சாப்பிடுவது ஆரோக்கியம்.
உலக மருத்துவர்கள் நேரம் பார்த்துத் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். தயவு செய்து நேரம் பார்த்து யாரும் சாப்பிடாதீர்கள். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள்.
எனவே சாப்பிடும் பொழுது பற்களால் நன்றாக அரைத்து மென்று பிறகு விழுங்க வேண்டும்.
நாம் பொதுவாகப் பற்களுக்கு வேலை கொடுப்பதே கிடையாது. குண்டு குண்டாக விழுங்கி விடுகிறோம். நாம் மொத்தம் 40 முறை கையால் எடுத்துச் சாப்பிடுவோம் என்று வைத்துக் கொள்வோம். முதல் நான்கு முறை சாப்பிட்ட உணவு பற்களுக்கு வேலை கொடுக்காமல் குண்டு குண்டாக வயிற்றில் சென்றடைவதால் வயிற்றில் நாற்பது கைக்கு வேண்டிய சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக வைத்துள்ள அமிலம் முதல் நான்கு வாய் உணவிற்கே தீர்ந்து விடுகிறது. ஏனென்றால் பற்கள் செய்ய வேண்டிய வேலையை அமிலம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நாம் முதலில் சாப்பிடும் நான்கு வாய் உணவு மட்டுமே நல்ல ரத்தமாக மாறுகிறது. அதன் பிறகு சாப்பிடும் 36வாய் சாப்பாடு வயிற்றில் அமிலம் இல்லாததால் கழிவுப் பொருளாகவும், மலமாகவும் மாறுகிறது. மேலும் தொப்பை வருவதற்கும் உடல் பருமன் அடைவதற்கும் ஒரே ஒரு காரணம் பற்களுக்கு வேலை கொடுக்காதது மட்டும்தான்.
வயிற்றில் அமிலம் இருக்கும் பொழுது சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது. தொப்பையாக மாறுவது கிடையாது. வயிற்றில் அமிலம் தீர்ந்த பிறகு சாப்பிடும் உணவு ஜீரணமும் ஆவதில்லை. தொப்பையாகவும் மாறுகிறது. உடல் பருமனுக்கும் இதுவே காரணம். எனவே, பற்களுக்குத் தயவு செய்து வேலை கொடுங்கள். ஓர் உணவைப் பற்கள் எவ்வளவு நேரம் மென்று கூழ் போல அரைத்த பிறகு வயிற்றுக்குள் அனுப்புகிறதோ அந்த அளவுக்கு வயிற்றிலுள்ள அமிலத்துக்கு வேலை குறைவாகும். குறைந்த அமிலத்தின் மூலமாக உங்கள் உணவை ஜீரணம் செய்துவிட்டு மீதமுள்ள அமிலங்கள் அடுத்து வரும் உணவுகளுக்குத் தயாராக இருக்கும். எனவே நாம் சாப்பிடுகிற குழம்பு, ரசம், மோர், பாயசம், பீடா ஆகிய அனைத்து உணவும் ஜீரணமாக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று கூழ் போல் அரைத்துப் பின்னர் விழுங்க வேண்டும்.
நம்மில் பலர் தொப்பை மற்றும் உடல் பருமனுக்காக நடைப்பயிற்சி (Walking) செல்வது வழக்கம். 4கி.மீ. வாக்கிங் சென்று வந்து பின்னர் நான்கு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் எப்படி உடல் இளைக்கும்? சிலர் புதிய டெக்னாலஜி மூலமாக (வைபரேட்டர்) Viberator Machine வயிற்றில் மாட்டிக் கொண்டும் Viberator மிஷினில் ஏறி நின்று கொண்டும் எலக்ட்ரானிக் முறையின் மூலமாக அதிர்வுகள் மூலமாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். பசி இல்லாமல் எதற்காகக் கண்டதைச் சாப்பிட வேண்டும்? பின்னர் ஏன் வைபரேட்டரில் ஆட வேண்டும்? பசி எடுத்துச் சாப்பிட்டால் தொப்பையும் இருக்காது. உடல் பருமனும் இருக்காது. பிறகு ஏன் நமக்கு இந்த வீர விளையாட்டுகள். எனவே நம் சிகிச்சையில் உடல் பருமனைக் குறைப்பதற்கும் தொப்பையைக் குறைப்பதற்கும் சுலபமான வழி பற்களுக்கு வேலை கொடுப்பதுதான்.
உங்கள் எடையை இன்று பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் கூறிய முறைப்படி உணவைச் சாப்பிடுங்கள். கண்டிப்பாக ஒரு மாதத்தில் உங்கள் எடை பல கிலோ குறையும். நீங்கள் வாக்கிங் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வைபரேட்டர் மெசின் பயன்படுத்தத் தேவையில்லை. ஏற்கெனவே ஒரு வேளைக்கு ஐந்து சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருந்தால் இப்பொழுது ஏழு சப்பாத்தி சாப்பிட்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம். அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதும் தவறான கருத்து. பற்களுக்கு அதிக வேலை கொடுப்பதன் மூலமாக அதிகமாகச் சாப்பிட்டும் எடையைக் குறைக்கலாம்.
நம் சிகிச்சையில் உங்கள் மனத்துக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் பற்களுக்கு நன்றாக வேலை கொடுத்துக் கூழ் போல அரைத்து உண்ணுவதன் மூலமாக மனத்திற்குப் பிடித்தமான அனைத்து உணவுகளையும் தாராளமாகச் சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும்.
நம் சிகிச்சையில் முதலில் தொப்பை குறையும். உடல் எடை குறையும். பிறகு தான் நோய்கள் குணமாகும். எனவே நம் சிகிச்சையைப் பயன்படுத்தும் பொழுது உடல் எடை குறைவு ஏற்பட்டால் தயவு செய்து பயப்படாதீர்கள். உங்கள் எடை எவ்வளவு குறைகிறதோ அந்த அளவிற்கு உங்கள் உடம்பில் கழிவு இருந்தது என்று பொருள். நம் சிகிச்சையைச் செய்யும்பொழுது யாருடைய உடல் எடை குறையவே இல்லையோ நீங்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் எடை சிறிது சிறிதாகக் குறையும். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சில மாதங்களுக்கு ஒரே எடை இருக்கும். அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் உண்மையான ஆரோக்கியமான உடலின் எடை. பிறகு மீண்டும் உங்களின் எடை கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வரும். இப்பொழுது அதிகமாகும் இந்த எடை ஆரோக்கியமான எலும்புகளும், நரம்புகளும், தசையினால் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான உடம்பு. இப்படி அதிகமாகும் உடல் எடை இனி குறையாது.
எனவே தயவு செய்து ஒரு கையில் உணவை எடுத்து வாயில் வைத்தால் குறைந்தது பத்து அல்லது பதினைந்து முறை நன்றாக மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து விழுங்குவதன் மூலமாக வயிற்றுக்கு உதவி செய்யுங்கள். பற்களில் மெல்வது மூலமாக வயிற்றின் வேலையைக் குறைத்து விட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். வயிறு சந்தோஷமாக இருந்தால்தான் நோய்கள் குணமாகும். நாம் ஆரோக்கியமாக இருப்போம்.
5.வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி
சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுநடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது அரைமணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும்.
சிலர் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை அருந்திவிட்டுச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணிக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். வயிற்றில் உணவை ஜீரணம் செய்வதற்காக சுரந்துள்ள அமிலத்தைத் தண்ணீர் குடித்தால் அது நீர்த்து விடும் (டைலூட்). வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்த பிறகு நாம் என்னதான் நல்ல உணவை நல்ல முறையில் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகாது. எனவே தண்ணீர் குடித்தவுடன் யாராவது உங்களைச் சாப்பிட அழைத்தால் “நான் இப்பொழுது வர மாட்டேன். இப்பொழுதுதான் தண்ணீர் குடித்து அமிலத்தை அணைத்துள்ளேன். எனவே அரை மணி நேரம் கழித்துச் சாப்பிட வருகிறேன்” என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட உட்காரும் பொழுதும் கடந்த அரை மணி நேரத்தில் தண்ணீர் குடித்தோமா என்று யோசிக்க வேண்டும். எனவே, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நாம் சாப்பிடுகிற உணவு பிரமாதமாக ஜீரணமாகும்.
சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தாலும் ஜீரணம் கெட்டுவிடும். சாப்பிடும் பொழுது நன்றாக உணவைப் பற்களால் மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நடுவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.
சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. நம்மில் பலபேர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்ற விகிதத்தில் தண்ணீர் குடிக்கிறோம். இதுவும் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே சாப்பிட்டு முடித்தவுடன் அரை மணி நேரம் காத்திருந்து பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம், சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஆகும். சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒன்றரை மணி நேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒன்றரை மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருப்பது? இந்த நேரத்தில் விக்கல், சிக்கல், தாகம், தொண்டை வறண்டு போதல், நாக்கு வறண்டு போதல், உணவு காரமாக இருத்தல் போன்ற சிக்கல்கள் வரும்பொழுது எப்படித் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என்று சிலர் மனத்தில் சந்தேகம் எழலாம்.
உணவு காரமாக இருந்தால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் நாக்கு உணவு காரமாக இருக்கிறது என்று நம்மிடம் பேசுகிறது. நம் நாக்கு தண்ணீர் குடியுங்கள் என்றா கூறியது? உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைப்பதற்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. எனவே, உணவு காரமாக இருக்கும் பொழுது தேவைப்பட்டால், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை ஊற்றி காரத்தைக் குறைக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. ஜீரணம் நடக்கும் பொழுது எண்ணெய் சென்றால் கூட ஒழுங்காக ஜீரணம் ஆகும். ஆனால், தண்ணீர் சென்றால் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைக்க மாற்று வழி யோசியுங்கள். தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் வந்தால் என்ன செய்வது? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்துச் சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நம் மூளைக்கும், அதாவது மனத்திற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது.
சாப்பிடும் பொழுது உணவைப் பற்றிய எண்ணம் மட்டுமே மனத்தில் இருந்தால் இந்த நரம்பு ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்காக வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும். திடீரென நம் மனம் குடும்பம், வியாபாரம் அல்லது வேறு நபரைப் பற்றி சிந்திக்கும் பொழுது இந்த நரம்பிற்குக் குழப்பம் ஏற்படும். வயிற்றில் ஜீரணம் சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா? அல்லது இவர் மனம் யோசிக்கும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா என்று குழப்பம் ஏற்படும் பொழுது வருவதுதான் விக்கல் சிக்கல். விக்கல் சிக்கல் வரும் பொழுது நாம் பொதுவாகக் கூறுவதுண்டு, யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று. கண்டிப்பாக யாரும் உங்களை நினைக்கவில்லை. நீங்கள் யாரையாவது நினைத்தால் மட்டுமே விக்கல், சிக்கல் வரும். எனவே, சாப்பிடும் பொழுது நம் கவனம் உணவில் இருக்கும் வரை யாருக்கும் விக்கல் சிக்கல் வராது.
தொண்டை தாகமாக இருந்தால்நாக்கு வறண்டு போனால் என்ன செய்வது? இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஒரு வேளை தாகமோ, தொண்டை வறட்சியோ அல்லது விக்கல் சிக்கல் வந்தாலோ, தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதற்கு ஓர் அளவு உண்டு. நாம் குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று சேராத அளவுக்கு குறைவாக குடிக்க வேண்டும். தொண்டை தாகமாக இருக்கிறது என்றால் தொண்டைக்கு அளவாகவும், நாக்கு வறண்டு போயிருந்தால் நாக்குக்கு அளவாகவும் குடிக்க வேண்டும். அதாவது உதடு, வாய், நாக்கு, உணவுக் குழாய் முதல் நெஞ்சுக் குழி வரை தண்ணீர் செல்லும் அளவிற்குக் குடிக்கலாம். நெஞ்சுக் குழிக்குக் கீழே வயிறு உள்ளது. குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று விழக்கூடாது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி, வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்குத் தண்ணீர் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் சேராத அளவிற்கு ஒரு கால் டம்ளர் தண்ணீரால் லேசாக வாயை நனைத்துக் கொள்ளலாம். உணவு சாப்பிடும் பொழுது நடுவே ஒரு வேளை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இருந்தால் மட்டுமே மீண்டும் கால் டம்ளர் வயிற்றில் நீர் சென்று விழாத அளவிற்குக் குடித்துக் கொள்ளலாம். இதே போல் சாப்பிட்டு முடித்தவுடனே நம்மில் பலர் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்று நீர் அருந்துகிறோம். தயவு செய்து அப்படிக் குடிக்காதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் கால் டம்ளர் முதல் அரை டம்ளர் வரை குறைவாக வாயைக் கொப்பளித்து விழுங்கும் அளவிற்கு தண்ணீர் குடித்தால் போதும். பிறகு அரை மணி நேரம் காத்திருங்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு தாராளமாக இரண்டு டம்ளர் அல்லது ஒரு சொம்பு வீதம் குடித்தால் ஜீரணத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாது.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரமும், சாப்பிடும் பொழுதும், சாப்பிட்ட பிறகு அரை மணி நேரமும் முடிந்த வரை தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் அளவு குறைவாகக் குடித்துக் கொள்ளுங்கள்.
பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக வலக்கையில் ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்று சேர்த்து மற்ற மூன்று விரலையும் நீட்டி உள்ளங்கையில் நீர் விட்டு உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்துக்கொண்டு உறிஞ்சிக் குடிப்பது வழக்கம். இதற்கு ஜலபரிஷேஸனம் என்று பெயர். இப்படி உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்காதீர்கள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது என்று நம் முன்னோர் டெக்னிக்கலாக பிரசாரம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக நல்ல பழக்கம் (ஆச்சாரம்) என்று சில பழக்கம் வழக்கங்களை நமக்குக் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எனவே சாப்பிடும் பொழுது ஒரு வேளை தேவைப்பட்டால் இந்த முறையில் மூன்று முறை நீரை உறிஞ்சிக் குடிப்பதன் மூலமாக வயிற்றில் உள்ள அமிலத்தைக் காப்பாற்ற முடியும்.
பிராமணர்கள் மற்றும் ஆச்சாரம் என்ற வார்த்தை பயன்படுத்திய் உடன் இந்த சிகிச்சை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று தயவு செய்து ஒரு முத்திரையைக் குத்திவிடாதீர்கள். இந்தச் சிகிச்சை எந்த மதத்துக்கும் சம்பந்தப்பட்டதல்ல. நோய்களுக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிகிச்சைக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நல்ல பழக்கங்கள் எந்தக் கலாசாரத்திலும் எந்த மதத்திலும் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
எனவே, ஜீரணத்தின் பொழுது, தண்ணீர் எவ்வாறு தடையாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு இனி தண்ணீரின் அளவைக்குறைத்து ஜீரணத்தை அதிகப்படுத்துங்கள்.
நாம் பொதுவாக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஒரு மாத்திரையைக் கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடுங்கள் என்று கூறுவார். சாப்பிடும் பொழுது கவனத்தை சாப்பாட்டில் வையுங்கள் என்றால் நாம் என்ன செய்கிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சாப்பிடும் பொழுது கவனத்தை மாத்திரையின் மீதே வைத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஓடிச் சென்று மாத்திரையை வாயில் போட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கிறோம். இந்த மருந்து மாத்திரைகள் நோயைக் குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால் அந்த மருந்து மாத்திரைக்காக நாம் சாப்பிடும் தண்ணீர் ஜீரணத்தைக் கெடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறது.
எனவே, மருந்து மாத்திரையை முடிந்த வரையில் சாப்பிடாமல் தவிருங்கள். சில நேரங்களில் மருந்து மாத்திரை நமக்குத் தேவைப்படுகிறது. அப்பொழுது சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் பொழுது உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிடாதீர்கள். அரை மணி நேரம் காத்திருந்து பிறகு மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அந்த நீர் ஜீரணத்தைக் கெடுக்காது.
சிலர் “நான் சாப்பிடும் பொழுதுதான் மாத்திரை சாப்பிடுவேன். அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட என்னால் முடியாது. இதற்கு வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்” என்றால் குழம்பு சாப்பாடு சாப்பிடும் பொழுது அதில் மாத்திரையை கலந்து பிணைந்து சாப்பிட்டு விடுங்கள். உங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.
தொடரும்...



உணவை ஜீரணம் செய்வது எப்படி?

நன்றி அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்துப் பொருள்களும் தரமான பொருளாக ரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.
1. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.
உணவை இப்படி சாப்பிட வேண்டும்; அப்படி சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிட வேண்டும்; அதைச் சாப்பிட வேண்டும்; இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்லபடியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து “நாங்க ரெடி. உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்குவதற்குத் தயார்” என்று உடல் நம்மிடம் பேசும் பாஷைதான் பசி.
பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக மாறுகிறது. நம் சிகிச்சையில் மிக, மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு. நேரம் நேரத்திற்கு யார் யார் எல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு எல்லாம் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிடுவது என்பதும், நேரம் பார்த்துச் சாப்பிடுவது என்பதும் வேறு வேறு.
உதாரணமாக காலை பத்து மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை. பெரிதாக உடலுக்கு நீங்கள் எந்த உழைப்பும் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். பகல் இரண்டு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம்? இரண்டு மணியாகிவிட்டது சாப்பிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் பசிக்கிறதா என்று யோசித்தோமா என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் ரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது பசி இல்லாமல் நேரம் பார்த்து இரண்டு மணிக்கு பகல் உணவு சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும்.
ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது.
உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் பசி எடுக்காமல் சாப்பிடுவதுதான். இரண்டாவது உதாரணம் காலை பத்து மணிக்கு உணவு சாப்பிடுகிறீர்கள். கடினமாக உழைக்கிறீர்கள். பன்னிரண்டு மணிக்குப் பசி எடுக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். நேரம் நேரத்திற்குத் தான் சாப்பிடுவேன். இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன் என்று காத்திருந்தால் என்ன ஆகும்? வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆஸிட் என்ற அமிலம் பன்னிரண்டு மணிக்குச் சுரந்து விடும். இரண்டு மணி வரை இந்த அமிலத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் நீர்த்துப் போகும். எனவே, பசி எடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிட்ட அந்த உணவு ஒழுங்காக ஜீரணமாகாது. எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நேரம் நேரத்திற்குச் சாப்பிட்டால் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிட்டால் நோய் வராது. வந்த நோயும் குணமாகும்.
ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்று யார் கண்டுபிடித்த சட்டம் இது? சிலருக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளில் ஐந்து முறை கூடச் சாப்பிடலாம். சிலருக்கு உடல் உழைப்பு குறைவாக இருக்கும். அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் போதும். எனவே, இன்று முதல் தயவு செய்து சாப்பிடுவதற்கு நேரம் பார்க்காதீர்கள். நாம் நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது உடல் பசி என்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் உணவைச் சாப்பிடுவதைப் பற்றி யோசித்து அதன் பிறகுதான் சாப்பிடவேண்டும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். யாக்கை என்றால் உடம்பு. எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவையே இல்லை. அருந்தியது அற்றது போற்றி உணின். அதாவது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமான பிறகு மீண்டும் நன்கு பசித்த பின்பு உணவு அருந்தினால் எந்த நோய்க்கும் உடலுக்கும் மருந்து தேவைப்படாது. எனவே, இந்தச் சிகிச்சையில் மிகமுக்கியமான ஒரு விஷயம் பசி எடுத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்காமல் இதற்குப் பிறகு வரும் பல முறைகளைக் கையாள்வதன் மூலமாக உங்களுக்குப் பலன் குறைவாகவே கிடைக்கும்.
ஒரு நாளைக்கு மூன்று முறை மாதத்திற்கு 90 முறை உணவு சாப்பிடுகிறோம். எல்லாராலும் 90 முறையும் பசி எடுத்துச் சாப்பிட முடியாது. எனவே, ஆரம்பத்தில் மாதத்தில் குறைந்தது பத்து முறையாவது பசி எடுத்துச் சாப்பிட்டுப் பழகுங்கள். போகப் போக இருபது முப்பது என்று அதிகப்படுத்தலாம். நம்மில் சிலர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்போம். ஒரு மணிக்கு உணவு இடைவேளை, இரண்டு மணிக்கு வேலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஒரு வேளை அப்பொழுது பசி இல்லையென்றால் என்ன செய்வது என்று கேள்வி வரும். மீண்டும் சொல்கிறேன். சில நேரங்களில் பசி இல்லாமல் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த மாதிரி நேரங்களில் இனி கூறப்போகும் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலமாக உணவு கழிவாகவும், விஷமாகவும் மாறுவதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் நம்மால் முடிந்த இடங்களில் பசிக்காகக் காத்திருப்பது நல்லது. எனவே, தயவு செய்து பசி எடுத்த பிறகு மட்டுமே உணவை உண்ணுங்கள்.
2.உணவில் எச்சில் கலக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே நல்ல பொருளாக ரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு கெட்ட பொருளாக ரத்தத்தில் கலக்கிறது. எச்சிலில் நிறைய நொதிகள் (என்சைம்) உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளைப் பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட ஓர் உணவு மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். எச்சிலால் ஜீரணிக்காத ஓர் உணவு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அது கெட்ட பொருளாகவும், கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இல்லை நாங்கள் எச்சில் கலந்து தான் சாப்பிடுகிறோம் என்று எல்லாரும் சொல்வோம். ஆனால் எச்சில் கலப்பது கிடையாது.
சாப்பிடும் பொழுது உணவை மெல்லும் பொழுது யார் யார் எல்லாம் உதட்டைப் பிரித்து மெல்லுகிறோமோ அவர்களுக்கு எச்சில் கலப்பது கிடையாது. மெல்லும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்பொழுது தான் எச்சில் கலக்கும். உதட்டைப் பிரித்து மெல்லுவதற்கும், உதட்டை மூடி மெல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், சாப்பாட்டை ஒரு பந்து போல கற்பனை செய்யுங்கள். எச்சில் ஒரு பந்து, உதட்டைப் பிரித்துச் சாப்பிடும் பொழுது காற்றுப் பந்து வாய்க்குள் சென்று சாப்பாட்டிற்கும் எச்சிலுக்கும் இடையில் தடையாக இருந்து ஜீரணத்தைக் கெடுக்கிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு காற்று எதிரி. எனவே, தயவு செய்து இனிமேல் எப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், உணவை வாய்க்குள் அனுப்புவதற்கு மட்டும் உதட்டைப் பிரியுங்கள். உணவு வாய்க்குள் நுழைந்த உடன் உதட்டைப் பிரிக்காமல் மென்று விழுங்கும் வரை உதட்டைப் பிரிக்காமல் இருங்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. ஏனென்றால் அந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
சில வெளிநாட்டுக்காரர்கள் நம்மூரில் வந்து சாப்பிடும் பொழுது வேடிக்கை பாருங்கள். அவர்கள் உதட்டைப் பிரிக்காமல் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உதட்டைப் பிரித்துச் சாப்பிடுவதன் மூலமாக இந்த நாடுகளில் அதிகமாக சர்க்கரை நோய் இருக்கிறது. உடனே சில நாடுகள் புத்திசாலி என்றும் சில நாடுகள் முட்டாள்கள் என்றும் தவறாக நினைத்து விடாதீர்கள். சில நாடுகளில் மனரீதியான நோய்களுக்கு அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதட்டை மூடிச் சாப்பிடும் அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்கள் அனைவரும் மனரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டு மனநோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அனைவரும் தினமும் பல மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். சிலநாடுகளில் உடல் ஒழுங்காக இல்லை. ஆனால், மனம் ஒழுங்காக இருக்கிறது. சில நாடுகளில் மனம் ஒழுங்காக இல்லை. ஆனால், உடல் ஒழுங்காக இருக்கிறது. எனவே மருந்து, மாத்திரை கம்பெனிகளுக்கு எல்லா நாட்டிலும் வியாபாரம் திருப்தியாக நடக்கிறது. எனவே, தயவு செய்து இனிமேல் ஒவ்வொரு வாய் உணவையும் உதட்டை மூடி மென்று விழுங்குங்கள்.
உதட்டை மூடிச் சாப்பிடுவதால் நேரம் அதிகமாகும் என்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரம் அதிகமாகாது, குறைவுதான் ஆகும். நீங்கள் ஒரு சப்பாத்தியை வாயில் வைத்து உதட்டைப் பிரித்து 40 முறை மெல்லுங்கள். சப்பாத்தி, சப்பாத்தி போலவே இருக்கும். கூழ் போல ஆகாது. ஆனால் உதட்டை மூடி நான்கு முறை மெல்லுவதால், சப்பாத்தி கூழ் போல மாறிவிடும். விழுங்க வேண்டிய வேலையே இல்லாமல் மைசூர்பா போல வழுக்கிக் கொண்டு உள்ளே செல்லும். உதட்டைப் பிரித்து ரொம்ப நேரம் சாப்பிடுவதை விட உதட்டை மூடி கொஞ்ச நேரத்திலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். எப்பொழுது உதட்டை மூடி மெல்லுகிறோமோ எச்சிலுக்கு ஒரே சந்தோஷம். காற்று என்ற எதிரி இல்லை என்பதால் சீக்கிரமாக உணவில் உள்ள அனைத்து மூலக் கூறுகளையும் பிரித்து அதை நல்லபடியாக ஜீரணம் செய்கிறது.
இந்த முறையில் சாப்பிடும் பொழுது ஒரு சின்ன சிக்கல் ஏற்படும். தாடை ஒரு வாரத்திற்கு நன்றாக வலிக்கும். ஏனென்றால் ஐம்பது வருடங்களாக இல்லாத புதுப் பழக்கம் அல்லவா? அப்படித்தான் வலிக்கும். அந்த வலியைத் தாங்கிக் கொண்டு ஒரு வாரம் பொறுமையாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக இருக்கலாம்.
எனவே, சிகிச்சையில் இரண்டாவது மிக மிக முக்கியமான விஷயம் சாப்பிடும் பொழுது வடை, போண்டா, பொங்கல், ஊத்தப்பம் எது எப்பொழுது யார் சாப்பிட்டாலும் உதட்டை மூடி மென்று விழுங்கும் வரை உதட்டைப் பிரிக்கக் கூடாது.
3.சாப்பிடும் போது கவனம் உணவில் இருக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடன் உணவில் கவனம் வைத்துச் சாப்பிட்டால், அது நன்றாக ஜீரணம் செய்யும். சாப்பிடும் பொழுது கவனத்தைக் குடும்பம், வியாபாரம் போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்துச் சாப்பிடும் பொழுது, சரியாக ஜீரணம் செய்வது கிடையாது. ‘நாம் மூளைக்குத்தானே வேலை கொடுக்கிறோம்? ஜீரணம் வயிற்றில்தானே நடக்கிறது? அது எப்படி பாதிக்கும்? என்ற சந்தேகம் வரும். நம் மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும், வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதைப் பற்றி எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும்.
உதாரணமாக நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம்? உடம்பில் எந்தப் பட்டனை (சுவிட்சை) அழுத்தினால் சிறுநீர் வருகிறது? அதற்கென்று தனியாக ஒரு பட்டனும் கிடையாது. மனத்தால் சிறுநீர் வர வேண்டும் என்று எண்ணியவுடன் வருகிறதல்லவா? எனவே மனம் நினைத்தால் மூத்திரப் பையின் கதவுகளைத் திறக்க முடியும். அதே போல் மனத்தால் நினைத்தால் கதவை அடைக்க முடியும். இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால், மனத்தால் நினைத்தால் நம் உடல் உறுப்புகளை இயக்க முடியும். நோய் முதலில் மனத்தில்தான் தோன்றுகிறது. பின்னர் மனம் தான் உறுப்புகளுக்கு நோயை உண்டாக்குகிறது. அதே போல் நாம் ஆரோக்யமாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே உறுப்புகளுக்கு நோய் குணமாகும்.
உதாரணம்-நாம் தூங்கும் பொழுது கனவு காண்கிறோம். கனவில் ஒரு பாம்பு துரத்துவது போல் காண்கிறோம். கனவில் வேகமாக ஓடுகிறோம். திடீரென கனவு கலைந்து எழுந்து அமர்ந்து பார்க்கும் பொழுது நம் இருதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும். பட படவென இருக்கும். உடல் முழுவதும் வியர்வை வந்திருக்கும். ‘நாம் கனவில்தானே ஓடினோம்? பின்னர் ஏன் வியர்வை வந்தது, நெஞ்சு படபடக்கிறது? ஏனென்றால் கனவில் ஓடுவது போல் மனம் நினைத்துப் பார்க்கும் பொழுது உடலில் ஓடுவதற்கான சக்தியை இழக்கிறோம். அதற்கான சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இந்த 2 உதாரணம் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, உடலிலுள்ள அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் சுரக்கும்.
எனவே, உணவை உண்ணும் பொழுது நம் கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாகச் சுரக்கும். அவ்வாறு இல்லாமல் சாப்பிடும் பொழுது குடும்பம், வியாபாரம், குழந்தை, மனைவி என்று யோசிப்பவர்களுக்கு ஜீரண சுரப்பிகள் சுரக்காததால் தான் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தயவு செய்து இனி சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வையுங்கள்.
ஒரு ஞானியிடம் சென்று சிலர் கேட்டார்கள். “ஐயா! உலகில் நோய்களுக்கான காரணம் என்ன?” என்று, அந்த ஞானி கூறினார் “சாப்பிடும் பொழுது யாரும் சாப்பிடுவதில்லை என்று.” மீண்டும் கேட்டார்கள். “உலகிலுள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்துவது எப்படி?” அதற்கு அந்த ஞானி சொன்னார் “சாப்பிடும் பொழுது சாப்பிட்டால் எல்லா நோயும் குணமாகும்” என்று. இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் உள்ளது. சாப்பிடும் பொழுது சாப்பிட வேண்டும் என்றால் என்ன? சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்கும் எவருக்கும் எந்த நோயும் வருவதில்லை.
எனவே சாப்பிடும் பொழுது உணவுக்கு மரியாதை கொடுத்து இந்த உணவை அளித்த கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லி அவரவர்க்குத் தெரிந்த ஒரு பிரார்த்தனையைச் செய்து உணவுக்கு மரியாதை கொடுத்து சாப்பிட்டால் மட்டுமே நோய்கள் குணமாகும். நம் குடும்ப மருத்துவருக்கு மரியாதை கொடுத்தால் நோய்கள் சற்றுப் பெரிதாகும். எனவே, மருத்துவருக்கு மரியாதை கொடுப்பதை விட்டு விட்டு, சாப்பிடும் சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள்.
உணவு சாப்பிடும் பொழுது, உணவைக் கையில் எடுத்து ‘இந்த உணவு வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி ரத்தமாக மாறி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது’ என்ற எண்ணத்தில் சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.
“பசியின்றி எதையும் உண்ணாதீர்கள்-உண்ணும் பொழுது
உணவைத் தவிர எதையும் எண்ணாதீர்கள்”
எனவே, சாப்பிடும் பொழுது தயவு செய்து கவனத்தை உணவில் வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருக்கலாம்.
நன்றி: அனாடமிக் செவிவழித் தொடு சிகிச்சை
தொடரும்...






செவ்வாய், 17 டிசம்பர், 2013

சுவையான சிக்கன் பிரியாணி


தேவையானப் பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
நெய் - 150 கிராம்
பட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் - 500 கிராம்
தக்காளி -500 கிராம்
இஞ்சி - 11/2 ஸ்பூன்
பூண்டு - 11/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா - 11/2 கப்
ப. மிள்காய் - 5
தயிர் - 1கப்
சிகப்பு மிளகாய் தூள் - 11/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன்
தணியா பொடி-1 டீஸ்பூன்
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:

ஓர்பெரியசட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும்

பின் அதில் பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் .போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்.

ப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதிகொமல்லிபுதினாபோட்டுவேகவிடவும்

சிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய்மேல்வரும்போது 1கப் அரிசிக்கு 11/2கப்சூடுநீர்ஊற்றிகொதிக்கவிடவும்

தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்குவடிகட்டவும்

அரிசியை போட்டு நன்கு கிளரவும்

அரிசிபாதிவேகும்வரைதீயை அதிகமாகவைக்கவும்

முக்கால்பகுதிவெந்தவுடன்தீயைசுருக்கவும்பாதி எலுமிச்சைஜீஸ்ஊற்றவும்

சட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்

10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி

சூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்

திங்கள், 2 டிசம்பர், 2013

நோன்பை அறிவுறுத்தும் மதங்கள்

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம்" என்பது சித்தர் பெருமகனார், ஆசான் திருமூலர் வாக்கு. ஆலயமான உடம்பை தூய்மையாக வைத்திருந்தாலே நோயற்ற வாழ வாழ்வு முடியும். தினந்தோறும் வயிறு புடைக்க உண்டு இயந்திரங்களுக்கு வேளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் நம்முன்னோர்கள் ஒருநாள் பட்டினி இருந்து விரதங்களை கடைபிடித்தனர்.

மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு நிறைய உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது.

நோன்பை அறிவுறுத்தும் மதங்கள்

அனைத்து மதக் கோட்பாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.

இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும்.

இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.

விரதத்தின் பலன்கள்

விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

உடல் உறுப்புக்கள் தூய்மை

நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.

நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படுகின்றன.

இளமை பாதுகாக்கப்படும்

வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

மாரடைப்பு தடுக்கப்படும்

வாரம் ஒருநாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

விரத்தை யார் தவிர்க்க வேண்டும்?

நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்க கூடாது. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

விரத நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சம்ரோக்ஷனம் (கும்பாபிஷேகம்) 16.09.2013

          நாளை 16.09.2013 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பத்தில் கடந்த 2000 வருடங்களுக்கு மேலாக அருள் புரிந்துவரும் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயார் சமேத லக்ஷ்மி ந்ருஸிம்மப்பெருமானுக்கு கும்பாபிஷகம் நடக்க உள்ளது. பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு ந்ருஸிம்ம பெருமானின் அருளை பெற வேண்டுகிறேன்.                                                                                                                                                                            

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருத்தலம் பூவரசன்குப்பம்


தீமையை அழித்து அறத்தைக் காக்கும் நோக்கில்  இறைவன் திருமால் எடுத்த அவதாரங்களில் மிகவும் குறுப்பிடத்தக்க அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.  திருமாலின் மற்ற அவதாரத்தைவிட  நரசிம்ஹ அவதாரத்தின் சிறப்பு என்னவேன்றல் பக்தனின் குறைதீர்க்கவும் அசுரன் இரண்யனை வதம் செய்யவும் பக்தன் பிரகலாதன் வேண்டியவுடன் நொடிப்பொழிதில் மனித உடலும் சிங்க தலையுடன் அவதரித்து  அரக்கன்  இரண்யனை அழித்து பிரகலாதனை காத்தவர் நரசிம்ஹர். 

நரசிம்ஹரின் இந்த சிறப்பு அவதாரத்திற்கும் ஒரு காரணம்  உண்டு, இரண்யன் தனக்கு இறப்பு ஏற்பட கூடாதென்று வேண்டி தவமிருந்து இறைவனிடம் மிகவும் சாமர்த்தியமாக தனக்கு பூமியிலோ, வானத்திலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியிலோ, இரவிலோ, பகலிலோ  மரணம் ஏற்படக் கூடாது என்றும், தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், பறவைகள் மற்றும் மிருகங்கள் போன்ற உயிரினங்களாலும் மற்றும் எந்த வகை ஆயுதங்களாலும் என் உயிர் பறிக்கப்படக் கூடாது என்றும் வரங்களைப் பெற்றான். இவ்வாறு  வரம் பெற்ற இரண்யன் தனக்கு மரணம் ஏற்படாது என்ற மமதையில் நாட்டில் உள்ள அனைவரும் கடவுளை வழிபடுவதிற்கு பதிலாக தன்னையே வணங்கவேண்டும் என்று உத்தரவிட்டான். மேலும் இறைவனை வழிபடும் அனைவரையும் சித்தரவதை செய்து சிறையில் அடைத்தான். 

இவ்வாறு நாட்டுமக்களை துன்புருத்திய இரண்யன் தன் மகனும் சிறந்த நாராயண பக்தனுமான  பிரகலாதனையும் விட்டுவைக்கவில்லை, "நாராயணன் மட்டுமே  கடவுள்' என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். அந்தத் தருணத்தில்தான் தன் பக்தன் பிரகலாதனுக்காக பிரகலாதனின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நொடியில்  தூணில் நரசிம்மமாக அவதரித்து இரன்யனை வதம் செய்தார். இரண்யனை வதம் செய்தபிறகும் கோபம் தனியாதால் தேவர்கள் பிரகலாதனை  வணங்குமாறு வேண்டினர்.  பக்தன் பிரகலாதன் வணங்கிய பிறகு சற்று சாந்தமடைந்தாலும் நரசிம்ஹரின்  கோபம் முழுமையாக நீங்காததை உணர்ந்த தேவர்கள் லக்ஷ்மி தேவியிடம் முறையிட்டு இறைவனை  சாந்தபடுதுமாறு வேண்டினர். லட்சுமி தேவியை கண்டவுடன் முற்றிலும் உக்கிரம் நீங்கிய நரசிம்ஹர் லட்சுமியை மடியில் அமர்த்தியபடி சாந்த சொரூபராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார். 

நரசிம்ஹர் அவதரித்த இடம் தற்போது அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது, இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  சப்தரிஷிகள் அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்கள் இரண்யவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர் அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம். இத்திருத்தலம் தென்அஹோபிலம் என்று போற்றப்படுகிறது. 

இத் திருக்கோவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் ஆகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.


இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண்   நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன்கள் தீரும், செல்வம்  குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்பது குறுப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தலம் விழுப்புரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ளது. விழுப்புரம் பண்ருட்டி சாலையில் கள்ளிப் பட்டியில் இறங்கினால் இத்தலம் 3 கி.மீ.  தொலைவில் உள்ளது. விழுப்புரம் புதுச்சேரி சாலையில் சிறுவந்தாடில் இறங்கினால் இத்தலம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.




ஒருமுறை இல்லையில்லை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவ் ஆலயம் சென்று ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹரை தரிசித்தவிட்டு வாருங்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெருகுவதை நீங்களே உணர்வீர்கள்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

SOME IMPORTENT........



Let it reach the 110 Crores Indians and the remaining if any.
Kindly, share this valuable information wherever possible

1. If you see children Begging anywhere in INDIA , please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.
 

2.
Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.http://www.friendstosupport.org/ 


3. 
Engineering Students can register in http://www.campuscouncil.com/to attend Off Campus for 40 Companies. 


4. 
Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.


5. 
If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips" 


6. 
If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them. 


7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics 


8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
 


9. Special phone number for Eye bank and Eye donation:04428281919 and 04428271616(Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites.http://ruraleye.org/ 

10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10.
Contact : 9916737471 


11. 
Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road , Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241 


12. 
Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline.
They will come and collect the food. Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS" 


Let it reach the 110 Crores Indians and the remaining if any.
 
 
 
 
“JAI HIND

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013


காரிய சித்தி மந்திரங்கள்


விநாயகர்

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர்பொருள் பற்றைத் தணிவிப்பவர்,வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர்இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்துவணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெறவிநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும்ஆரம்பிக்க வேண்டும்இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும்மறைந்து போகவும் வெள்ளை நிறஉடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும்நிறைந்திருக்கும் பரம்பொருளும்நிலவைப் போன்ற தன்மையுடையவரும்எப்பொழுதும்ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன்பொருளாகும்.

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும்பூத கணங்களால் வணங்கப்பட்டவரும்,விளாம்பழம்நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும்உமையின் புத்திரனும்,துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

ஓம் நமோ நாராயணாய

சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம்மனதில்நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவைபஞ்சுபோல் மறைந்து விடும்.

அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.

ஓம் நமோ நாராயணாய

ஓம் என்பது ஓரெழுத்தாகவும்நம என்பது இரண்டெழுத்தாகவும்நாராயணாய என்பதுஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம்எனப்படும்இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும்எல்லாவிதஆபத்துக்களும் நீங்கும்தீமைகள்துன்பங்கள் தொடராதுமுக வசீகரம் கிடைக்கும்எல்லாச்செல்வங்களும் கிட்டும்காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம்செய்கிறான்மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான்.உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள்உப பாதகங்களிலிருந்துவிடுபடுகிறான்எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.

குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலத்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

வல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

விநாயகர் காயத்திரி

ஓம் தத்புருஷாய வித்மஹேவக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திப்ரசோதயாத்

லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்லகல்வி அறிவு வளர்ச்சி பெறும்அறிவுவிருத்தியாகும்தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

சகல காரிய சித்திக்கான எளிய முறை:

செய்யும் காரியங்களில் தடைகள் விலக

மஹா கணபதிர் புத்தி ப்ரியஷிப்ர ப்ரஸாதத 
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

நாகதோஷம் நீங்கிகுழந்தைப்பேறு உண்டாக

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ:
ஸர்ப்பஹார கடீஸூத்ரஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடகஸர்ப்ப க்ரைவேயகாங்கத:
ஸர்ப்ப ÷க்ஷõதராபந்தஸர்ப்பராஜோத்தரீயக:

இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும்.

இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகதஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபதலலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமநகாமமாலிநீ கேளிலாலித:

இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

கல்வியில் மேன்மை பெற

ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தநஸ்ரீநிகேதந:
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:

இதைக் கூறினால் கல்வி வளரும்.

சிறந்த செல்வம் பெற

தநதாந்யபதிர் த்ந்யோ தநதோ தரணீதர:
த்யாநைக ப்ரகடோ த்யேயத்யாநோ த்யாந பராயண:

இதைக் கூறினால் தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.

நோய்கள் நீங்க

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:

அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

மன பயம் நீங்கி தைரியம் உண்டாக

ப்ரூ÷க்ஷபதத்த லக்ஷ?மீகபர்கோ பத்ரோ பயாபஹ:
பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண:

இதை தினமும் 10 முறை கூற மனதில் பயம் விலகும்.

வியாபாரத்தில் லாபம் உண்டாக

÷க்ஷõ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:

இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.

சுகப்பிரசவம் சாத்தியமாக

ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:

இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.

வழக்குகளில் வெற்றி பெற

மேதாதகீர்த்திதஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந:
ப்ரதிவாதி முகஸ்தம்பதுஷ்டசித்த ப்ரஸாதந:

இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.

பில்லிசூன்யம் அணுகாதிருக்க

பராபிசாரஸமநது:கபஞ்ஜந காரக
லவஸ்த்ருடிகளா காஷ்டா நிமேஷகடிமுஹூர்த்தக:

இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால்பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மைஒன்றும் செய்யாது.

நவக்கிரக தோஷம் நீங்க

ராஹுர் மந்தகவிர் ஜீவபுதோ பௌம ஸஸீ ரவி:
காலஸ்ருஷ்டிஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத்

இதைப் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

பூதபிரேத பிசாசுகளின் தொல்லைகள் நீங்க

பூராபோக்நிர் மருத் வ்யோமா அஹம் க்ருத் ப்ரக்ருதிபுமாந்
ப்ரஹ்மா விஷ்ணுஸிவோ ருத்ர ஈஸஸக்திஸதாஸிவ:

த்ரிதஸாபிதரஸித்தாயக்ஷõ: ரக்ஷõஸ்ச கிந்நரா:
ஸாத்யா வித்யாதரா பூதாமநுஷ்யாபஸவககா:

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க

அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:
அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:

அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்
அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவிப்ரிய:

மஹா கணேச தியானம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்

சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே

வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா

மூக்ஷ? வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம்
லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம்
சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம்

தினமும் பெண்கள் கூற வேண்டியது

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும்.தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள்கிட்டும்செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறிமங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.

செல்வம் கிடைக்க

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !

ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ

என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும்மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

மகாலட்சுமி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே

ஆத்யந்த் ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே

ஸ்த்தூல ஸூக்ஷ? மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ?மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ?மி நமோஸ்துதே

ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ?மி நமோஸ்துதே.

மஹாலக்ஷ?ம்யஷ்டக ஸ்தோத்ரம் படேன் பக்திமான் நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

திரிகாலம் படேந்நித்யம் மஹாஸத்ருவிநாஸனம்
மஹாலக்ஷ?மீர் பவேன் நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும்வேலை கிடைக்கவும்

லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமிபடத்தின் அடியில் புத்தகத்தை வைத்துபிரதி தினம் காலையில் 10 முறைவெள்ளிக்கிழமைமாலையில் நெய்தீபம் ஏற்றிஅதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால்செல்வம் உண்டாகும்வேலை கிடைக்கும்.

ஸ்ரீ தேவிஹி அம்ருதோத்
பூதா-கமலா-சந்த்ர சேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராரோஹீ  ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ?மீ  ஸுந்தரீ

குபேரர் தியான ஸ்லோகம்

மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!

குபேரர் சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்

ஓம் யக்ஷõ குபேராய வைஸ்வரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா

குபேரர் காயத்திரி

ஓம் ÷க்ஷசாய  வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி
தன்னோ  ஸ்ரீத  ப்ரசோதயாத்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி
தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்

இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரைவழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.

ஸ்வர்ணப்ரத
ஸ்வர்ணவர்ஷீ
ஸ்வர்ணாகர்ஷண பைரவ
பக்தப்ரிய
பக்த வச்ய
பக்தாபீஷ்ட பலப்ரத
ஸித்தித
கருணாமூர்த்தி
பக்தாபீஷ்ட ப்ரபூரக
நிதிஸித்திப்ரத
ஸ்வர்ணா ஸித்தித
ரசஸித்தித

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
ஹூம்பட் ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.

கடன்கள் தீர நரசிம்மர் ஸ்தோத்திரம்

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

5. ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

6. ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
பக்தானாம்  பயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

8. வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

9.  இதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்ச்ஞிதம்
அந்ருணீஜாயதே சத்ய :
தனம் சீக்ர - மவாப்னுயாத்

அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்

மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாயஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11முறை பாராயணம் செய்யவும்.

நீண்ட ஆயுள் பெறமரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாயத்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ  மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
(மார்க்கண்டேயர் அருளியது)

இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம்நீங்கும்நீண்ட ஆயுள் உண்டாகும்.

ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!

காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம
ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக்
ம்ருத்யுஞ்ஜயப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்

தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார்திருப்பாற்கடலைக் கடையும்பொழுதுஅமிர்த கலசத்துடன் வந்தவர்கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை,மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும்நோயற்ற வாழ்வுகிட்டும்மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும்அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும்தன்வந்திரியின்அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)

பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்திபஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லாநன்மையும் உண்டாகும்அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்தஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதிபஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள்திதி என்பது சூரியன்,சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றிவழிபட வேண்டும்வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமிதேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம்நைவேத்தியம் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.

ஆபத்துக்கள் விலக

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால்அஞ்ஞான இருள் விலகும்.எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும்ஆபத்து நீங்கும்பயம் விலகும்.தைரியம்பிறக்கும்சந்தோஷம் நிலைக்கும்.

விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்துசுத்தமான உடை அணிந்து கிழக்குநோக்கி அமர்ந்துகண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம்108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும்சௌபாக்கியம் பிறக்கும்.

மஹா சுதர்ஸனர் மஹாமந்திரம்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

பிருஹஸ்பதி மந்திரம்

இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம்அறிவுசந்தானம் ஆகியவைகிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும்மேலும் 1, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் குருவாசம்செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி குருவின் அருள் கிட்டும்.

1. ஸ்ரீ கணேஸாய நமஓம்
குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ:
ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ தி யோ தீர்க்க-
ஸமஸ்ருபீதாம்பரோ யுவா

2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ
க்ரஹ-பீடா-அபஹாரக:
தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி:
ஸுரார்ச்யகுட்மல த்யுதி:

3. லோக்-பூஜ்யோ லோக-குரு
நீதி-க்ஞோநீதி-காரக
தாரா-பதிஸ்ச  ஆங்கிரஸோ
வேத-வேத்யோ பிதாமஹ

4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா
நாமானி ஏதாநி படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான்
புத்ரவான்  பவேந் நர:

5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ
பாபம் நஸ்யதி நஸ்யதி
பூஜயோத் குரு-தினே
பீத-கந்த-அக்ஷத-அம்பரை:

6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச
பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா
பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:

கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க

கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர்இவர் குதிரை முகம் கொண்டவர்திருமாலின்உருவங்களில் ஒன்றாக விளங்குபவர்கல்வியில் சிறப்படைய இந்த சுலோகத்தைத் தினமும்காலைமாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.

ஹயக்ரீவர் மூலமந்திரம்

உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய

ஹயக்ரீவர் காயத்திரி

ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்

ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்

1. ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே

2. சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

சரஸ்வதி காயத்திரி

ஓம் வாக் தேவ்யை  வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை  தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்

ஓம் வாக் தேவீ  வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்

சரஸ்வதி தியான ஸ்லோகம்

1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம்  சுகம் கரை

3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்

4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன

5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்

6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா

8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே

9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே

10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

சரபேஸ்வரர்

இந்த தியான சுலோகத்தை காலையும்மாலையும் கூறி வந்தால் பேராபத்திலிருந்தும்,பெரும் நஷ்டத்திலிருந்தும்கொடும் நோயிலிருந்தும் விடுபடலாம்இவரை வழிபடுவதால்பேராபத்துபூகம்பம்தீ விபத்துமண்மாரிஇடிபுயல்மின்னல்பரிகாரம் காணமுடியாததுன்பம்தீராத வியாதிகள்மனநலம் இல்லாமைவிஷபயம்பூதப் பிரேத பைசாசம்ஆகியவைகளின் பயம் நீங்கும் என வியாசர் லிங்கபுராணம் 96வது அத்தியாயத்தில்கூறியுள்ளார்.

தியான ஸ்லோகம்

ஹூம்காரீ சரபேஸ்வரஅஷ்ட சரண:
பக்ஷ?சதுர் பாஹூக:
பாதர் கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
காலாக்னி கோடித்யுதி:
விச்வ ÷க்ஷõ நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதரபுரஸ்த சாப:
ஸத் யோரிபுக் னோஸ்து :

மூல மந்திரம்

ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர
ஹாஸிப்ராணக்ரஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷ?ராஜாய ஹூம்பட் ஸ்வாஸா.

சரபேஸ்வரர் காயத்திரி

ஓம் ஸாலுவேசாய வித்மஹே பக்ஷராஜாய தீமஹி
தந்நோ சரப : ப்ரசோதயாத்

திருமணம் நடைபெற பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில்தியானித்து குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் நிச்சயமாகநடைபெறும் என்பது நம்பிக்கை.

தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம்  தேஹி மே
பதிம் தேஹி சுகம் தேஹி
சௌபாக்யம் தேஹி மே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகாமாயே
மகா யோக நிதீஸ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நம:

திருமணம் கைகூட

இந்த ஸ்லோகத்தை காலைமாலை இருவேளையும் பதினெட்டு தரம் ஜபித்து வர திருமணம்ஆகாத ஆண்பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.

கல்யாணரூபகல்யாணகல்யாண குண ஸம்ரய:
ஸுந்தரப்ரூஸுநயந:ஸுலலாடஸுகந்தர:

எமபயம் தீரமன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மந்திரம்

ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது

தினமும் காலையில் குளித்து விட்டு மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு108 முறை சொல்லவும்.

மஹா பிரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம்

ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே
கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே
க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்

கெட்ட கனவுகள் வராமலிருக்க

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே.

இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்துகூறிவிட்டுத் தூங்கவும்.

அர்க்கள ஸ்தோத்திரம்

(எல்லாவித இடையூறுகளும் நீங்கிஎல்லா காரியங்களிலும் வெற்றி பெற)

ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
ஜயத்வம் தேவிசாமுண்டே ஜயபூதார்த்தி ஹாரிணி
ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே
மதுகைடப வித்ராவி விதாத்ரு வரதே நம:

ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி
மஹிஷாஸூர நிர்ணாச விதாத்ரி வரதே நம:
ரக்தபீஜவதே தேவி சண்டமுண்டவிநாசினி
சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி
வந்தி தாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸெளபாக்ய தாயினி

அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு வினாசினி
நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே
ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி
சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:
தேஹி ஸெளபாக்யமாரோக்யம் தேஹிமே பரமம்ஸீகம்

விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை
விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்
ஸூராஸூர சிரோத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே
வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ?மீவந்தம் ஜனம் குரு
ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணமதாயமே

சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்வரீ
க்ருஷ்ணேண ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே
ஹிமாசல ஸூதாநாத பூஜிதே பரமேச்வரீ
இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேச்வரி
தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி

தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோதயேம்பிகே
பத்னீம் மனோரமாம் தேஹி மனேவ்ருத்தானு ஸாரிணீம்
தாரீணீம் துர்க்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
இதம் ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன் நர:
ஸது ஸப்த சதீ ஸங்கயா வரமாப்னோதி ஸம்பதாம்.

சர்ப்ப தோஷம் நீங்க

நர்ம தாயை நமப்ராத
நர்ம தாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம்
த்ராஹிமாம் விஷ ஸர்பத !

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்

விபூதிகுங்குமம் தரித்துதீபத்தை ஏற்றி வைத்து ஒரு தட்டில் விபூதிகுங்குமத்தைசாமிபடத்தின் முன் வைத்து மூன்று முறை பாராயணம் செய்து பிறகு விபூதிகு
ங்குமத்தை உபயோகப்படுத்தினால் சகல மங்களமும் உண்டாகும்.

1. பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி 
ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்

2. நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்
ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே

3. பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி 
ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம  வித்யதே

4. ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர
அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர

5. ஸுமீனாக்ஷஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ
தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ  வித்யதே

6. ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக
ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர

7. கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன
மாமுத்ரா பதம் போதேத்ரிபுரக்நாந்தகாந்தக

8. கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர
அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர

9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்

10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:

11. ச்ரியகாந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்

13. க்ருஷ்ணகரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ
காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ

14. ஸ்ரீ ராம சந்திரச்ரிதபாரிஜாதஸமஸ்த கல்யாண குணாபிராம:
ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீகநிரந்தரம் மங்கள மாத நோது

15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்

16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி

17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்
பயக்ரோத மநக்லேசாநச்யந்து மம ஸர்வதா !

ஜய ப்ரத சுப்ரமண்ய ஸ்தோத்திரம்

ஜயத்தை அளிக்கும்ஐஸ்வர்யம்கல்விஞாபசக்தி அதிகரிக்கும்கடன் தொல்லைவியாதிநீங்கும்.

ஜய தேவேந்த்ரஜா காந்த ஜய ம்ருத்யுஞ் ஜயாத்மஜ
ஜய சைலேந்த்ரஜா ஸூநோ ஜய சம்புகணாவ்ருத

ஜய தாரக தர்பக்ன ஜய விக்னேச்வராநுஜ
ஜய தேவேந்த்ர ஜாமாதஜய பங்கஜ லோசன

ஜய சங்கரஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சித
ஜய தாக்ஷõயணீஸூநோ ஜயகாசவநோத்பவ

ஜய பாகீரதி ஸூநோ ஜய பாவக ஸம்பவ
ஜய பத்மஜகர்வக்ந ஜய வைகுண்ட பூஜித

ஜய பக்தேஷ்ட வரத ஜய பக்தார்த்தி பஞ்சன
ஜய பக்த பராதீன ஜய பக்த ப்ரபூஜித

ஜய தர்மவதாம் ச்ரேஷ்ட ஜய தாரித்ரிய நாசன
ஜய புத்திமதாம் ச்ரேஷ்ட ஜய நாரத ஸந்நுத

ஜய போகீச்வராதீச ஜயதும்புருஸேவித
ஜய ஷடதாரகாராத்ய ஜய வல்லீ மனோஹர

ஜய யோக ஸமாராத்ய ஜய ஸூந்தர விக்ரஹ
ஜய ஸெளந்தர்ய கூபார ஜய வாஸவ வந்தித

ஜய ஷட்பாவ ரஹித ஜய வேதவிதாம் பர
ஜய ஷண்முக தேவேச ஜய போ விஜயீபவ

துர்க்கா த்வாத்ரிம்சந் நாமமாலா

ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது ஸ்ரீ துர்கா தேவியின்திருநாமம்இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தைஜபித்தால் மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.

துர்காதுர்காதிஸமநீதுர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீதுர்கஸாதிநீதுர்கநாஸிநீ

துர்கதோத்தாரிணீதுர்கநிஹந்த்ரீதுர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதாதுர்க தைத்யலோக தவாநலா

துர்கமாதுர்கமாலோகாதுர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதாதுர்கம வித்யாதுர்கமாஸ்ரிதா

துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநாதுர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹாதுர்கமஹாதுர்க மார்த்த ஸ்வரூபிணி

துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீதுர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீதுர்கமாதாதுர்கம்யாதுர்கமேஸ்வரி

துர்கபீமாதுர்கபாமாதுர்கபாதுர்கதாரிணீ

செல்வம் மேலும் வளர

இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்துவந்தால்வறுமை ஒழியும்தனதான்யங்கள் விருத்தியாகும்.

அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸும ப்ரிய
தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:

ஆபத்துகள் அகல

இந்த ஸ்லோகத்தை காலை வேளையில் பத்து தடவை ஜெபித்து வரநம்மைச் சுற்றியுள்ளசகல துன்பங்களும்ஆபத்துகளும் அறவே அகன்று விடும்.

சிந்தாயோக ப்ரயமநோ ஜகதாநந்த காராக:
ரய்மிமாந்த புவநேயய்ச தேவாஸுர ஸுபூஜித:

சிறை பயம் நீங்க

இந்த ஸ்லோகத்தை காலையில் நூற்று எட்டு தரம் உருக்கமாகப் பாராயணம் செய்து வரசிறைவாச பயம் நீங்கும்.

கணாகரோ குணய்ரேஷ்ட்டஸச்சிதாநந்த விக்ரஹ:
ஸுகதகாரணம் கர்த்தா பவபந்த விமோசக்:

ஞானம் விருத்தியடைய

இந்த ஸ்லோகத்தை காலையிலும்மாலையிலும் படிப்பதற்கு முன்பதினோரு தடவைபாராயணம் செய்து வந்தால் ஞானம் விருத்தியடைவதோடு படிப்படில் சி
றந்து விளங்குவார்கள்சிறந்த அறிவாளியாகவும் திகழ்வர்.

வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:
அஜ்ஞாநவந தாவாக்நிபரஜ்ஞாப்ராஸாத பூதி:

நினைத்த காரியம் நிறைவேற

இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம்செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.

சிந்தாமணிஸுரகுருத்யேயோ நீராஜநப்ரிய:
கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய:

எல்லா விருப்பங்களும் நிறைவேற யோக நரசிம்மர் ஸ்லோகம்

ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா

ஐயனேலட்சுமி நரசிம்ம பிரபோமிக பயங்கரமான உருவமும் சிங்கமுகமும் உடையவரே!கருணை நிரம்பியவரேஅபயம் காக்கும் கரத்தினை உடையவரேஉலகைக் காக்கும்பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானேஎங்களது பாவங்களை உடனடிகயாகக் களைந்துநலம் தருபவரேஎங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின்அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும்.

என்றும் ஐஸ்வர்யம் நிலைக்கவும்நிம்மதி அடையவும் ஸ்லோகம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் !
கமலே கமலாலயே ப்ரஸீதப்ரஸீத !
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ?ம்யை நமஹ,
ஓம் ஸ்ரீம் ஹரீம்ஐம்
ஞானாயைமஹாலக்ஷ?ம்யைஐஸ்வர்யாயை
கமலதாரிண்யைசக்த்யைசிம்ஹவாஹின்யை நமஹ !

சுதர்சன சக்கரத்தாழ்வார் மந்திரம்

வெற்றியைக் கொடுக்கும்நோய் நீக்கும்பயம் விலக்கும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாயபரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசார
அஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.

ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலாபரீதாய-ஸர்வதிக் ÷க்ஷõபண கராய ஹும் பட் பரப்ரஹ்மணே-பரம் ஜ்யோதிஷே
ஸ்வாஹா.

ஓம் நமோ பகவதே ஸுதர்ஸநாய-ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஸநாய-மஹாசக்ராய-மஹா ஜ்வாலாய-ஸர்வரோகப்ரஸமநாய-கர்ம-பந்த-விமோசனாய
-பாதாதி-மஸ்த பர்யந்தம் வாதஜநித ரோகாந்பித்த-ஜநிதி-ரோகாந்ஸ்லேஷ்ம ஜநித ரோகாந்,தாது-ஸங்கலிகோத்பவ-நாநாவிகார-ரோகாந் நாஸய நாஸயப்
ரஸமய ப்ரஸமயஆரோக்யம் தேஹி தேஹிஓம் ஸஹஸ்ரார ஹும் பட் ஸ்வாஹா.

சுதர்சன காயத்திரி

ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரப்ரசோதயாத்

சுதர்சன மூல மந்திரம்

ஓம்ஸ்ராஹும்பட்.

மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே

திருவிளக்கு ஸ்தோத்திரம்

ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷ?மியே நம
ஓம் தீப லக்ஷ?மியே நம
ஓம் மஹா லக்ஷ?மியே நம
ஓம் தனலக்ஷ?மியே நம
ஓம் தான்யலக்ஷ?மியே நம

ஓம் தைர்யலக்ஷ?மியே நம
ஓம் வீரலக்ஷ?மியே நம
ஓம் விஜயலக்ஷ?மியே நம
ஓம் வித்யா லக்ஷ?மியே நம
ஓம் ஜெய லக்ஷ?மியே நம
ஓம் வரலக்ஷ?மியே நம
ஓம் கஜலக்ஷ?மியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷ?மியே நம

ஓம் ராஜலக்ஷ?மியே நம
ஓம் கிருஹலக்ஷ?மியே நம
ஓம் சித்த லக்ஷ?மியே நம
ஓம் சீதா லக்ஷ?மியே நம
ஓம் திரிபுரலக்ஷ?மியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷ?மியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம

ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

ஆஞ்சநேயர் மந்திரங்கள் (பஞ்சமுக ஆஞ்சநேயர்)

கிழக்கு முகம்-ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

தெற்கு முகம்-நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள்தோஷங்கள்பூத ப்ரேத,துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ? முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

மேற்கு முகம்-கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள்விஷக்கடி,விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

வடக்கு முகம்வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஆஞ்சநேயர் மந்திரங்கள் (பஞ்சமுக ஆஞ்சநேயர்)

கிழக்கு முகம்-ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

தெற்கு முகம்-நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள்தோஷங்கள்பூத ப்ரேத,துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ? முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

மேற்கு முகம்-கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள்விஷக்கடி,விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

வடக்கு முகம்வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

மேல்முகம்-ஹயக்ரீவர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம்வாக்குபலிதம்கல்வியில்முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

ஸ்ரீ சக்கரம்

(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

காயத்ரி சஹஸ்ர நாம மந்திரங்கள்

நினைத்ததெல்லாம் நிறைவேற

ஸமாநா ஸாமதேவீ  ஸமஸ்த ஸுரஸேவிதா
ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா

இந்தச் சுலோகத்தை காலையில் 18 முறை கூறி வருபவர்களுக்கு சகல காரியங்களிலும்வெற்றி உண்டாகும்.

தேர்வில் வெற்றி பெற

வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீ
விமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா

இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால்ஞாபக சக்தியும் தேர்வில்வெற்றியும் கிடைக்கும்.

செல்வம் விருத்தியடைய

வஸுப்ரதா வாஸுதேவீ வாஸுதேவ மநோஹரீ
வாஸவார்சித பாதஸ்ரீவாஸவாரி விநாஸி நீ

இந்த சுலோகத்தை காலை மாலைகளில் 18 முறை ஜபித்து வந்தால் நாளுக்கு நாள் செல்வம்அதிகமாக விருத்தியாகும்.

ஆபரண சேர்க்கை கிடைக்க

ரத்னப்ராகார மத்யஸ்த்தா ரத்நமண்டப மத்யகா
ரத்நாபிஷேக ஸந்துஷ்டா ரத்நாங்கீ ரத்நதாயிநீ

இந்த சுலோகத்தை காலையில் 10 முறை ஜபித்து வந்தால் பெண்களுக்கு நகைகள்,ரத்தினங்கள் இவையெல்லாம் கிடைக்கும்.

அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட

ஸர்வரோக ப்ரஸ்மநீ ஸர்வபாப விமோசநீ
ஸமத்ருஷ்டிஸமகுணா ஸர்வகோப்த்ரீ ஸஹாயிநீ

இந்தச் சுலோகத்தை 108 முறை நீரைத் தொட்டு ஜபித்து வந்தால் ஜுரம் முதலிய நோய்கள்நீங்கும்.

தனதான்யங்கள் பெருக

தநதாந்யா தேநுரூபா தநாட்யா தநதாயிநீ
ததேஸீதர்மநிரதா தர்மராஜ ப்ரஸாதிநீ

இந்த சுலோகத்தை தினந்தோறும் காலையில் 10 முறை படித்து வந்தால் தனதான்யங்கள்மேன்மேலும் பெருகும்.

மனோ வியாதிசத்ரு பயம் நீங்க

சக்தே பஜே த்வாம் சுகதோ ஜனித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹஹஸபுதபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

ஆஞ்சநேயர் மந்திரங்கள்

நினைத்த காரியம் இனிதே நிறைவேற

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.

இதை பூஜையில் 108 முறை கூறவும்.

கலைகளில் தேர்ச்சி பெறவும்நினைவாற்றலுக்கும்

ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனாத் பவேத்.

இதை தினமும் 12 முறை கூறவும்.

நவக்கிரகங்கள் தோஷம் நீங்க

ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர
ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ
சனைச்வரராகு கேதுர்மருத்தோதா தாதா
ஹர்தா ஸமீரஜா:

இதை தினமும் காலையில் 9 முறை கூறவும்

எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க

ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர
ஜகத்பிதா ஹரிச்ரீசோகருடஸ்மய பஞ்ஜன:

க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய

இதை தினமும் 12 முறை கூறவும்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட

ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ?
ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந்
அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர்
காதா ஸ்ம்ருதிர் மனு:

இதை காலைமாலை 12 முறை கூறவும்.

தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற

ஓம் காத்யாயனி மஹாமாயே
மஹா யோஹீன் யதீச்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:

இதை காலை 12 முறை கூறவும்.

வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது

(இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்)

ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித
பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.

இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.

எல்லா விஷங்களும் நீங்க

ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர கருடாய பஞ்சமுகி
வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல
விஷ ஹரணாய ஸ்வாஹா.

கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்பாநலஸ்யச
ருது பர்ணஸ்ய ராஜர்ஷேகீர்த்தனம் கலிநாசனம்.

சகல செல்வங்களும் பெற

ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ
ஹனுமதே லம் லம் லம் லம் லம்
ஸகல சம்பத்கராய ஸ்வாஹா.

துளசி பறிக்க

துளசி அம்ருத ஸம்பூதே ஸகாத்வம் கேசவப் பிரியா
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபனே

லட்சுமி ஸ்துதி மாலா

ராஜராஜேஸ்வரீம் லக்ஷ?மீம் வரதாம் மணிமாலினீம்
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்யார்த்த ஸித்தயே

வரமளிப்பவளும் மணி மயமான மாலை தரித்த ராஜராஜேஸ்வரி ரூபமான லட்சுமியும்தேவர்களுக்குப் பிரியமான கீர்த்தி ஸ்வரூபிணியுமான தேவியை நமஸ்கரிக்கின்றேன்.

ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்

ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
கான்யகோமள வாக் விலாஸ மதுலம்
மந்தோமுத முததம் ஸர்வத:
ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
கேதுகுலஸ்யோன்னதிம் ஓம்

சூர்ய நமஸ்கார மந்திரங்கள்

ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூரிய நமஸ்காரம் முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும்மந்திரம்

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.

சூரிய (பூஜைநமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போலசூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும்இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில்செய்யலாம்அதிகாலையில்அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடைஅணிந்து சமயச் சின்னங்களை (விபூதிகுங்குமம்திருமண் போன்றவைஅணிந்து கிழக்குதிசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

பாஸ்கராய வித்மஹே
மஹத் விதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்

என்பது சூரிய காயத்ரிஇதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளியமந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம்.

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ

இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம்ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர்உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம்.

அஷ்டலெட்சுமி துதி (தேவி சூக்தம்)

1. தனலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

2. வித்யாலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

3. தான்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

4. சௌபாக்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

5. வீரலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

6. சந்தானலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

7. காருண்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

8. மஹாலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது

குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய 
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம

கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்க்ஷ?யாய அமித தேஜயே

கருடன் (விஷ்ணு வாஹனன்)

கருட மந்திரம் மிகவும் முக்கியமானதுஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தைஉபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.

கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

ஓம் நமோ பகவதேகருடாயகாலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருடன் காயத்திரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

பாலா த்ரயக்ஷரீ மூலமந்திரம்

ஐம் க்லீம் ஸெள:

ஸ்ரீ வித்யா பாலா த்ரிபுரஸுந்தரி ஷடாக்ஷரீ மூலமந்திரம்

ஓம் ஐம் க்லீம் ஸெளஸெள : க்லீம் ஐம்

மஹாலக்ஷ?மி மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ?மி
மஹாலக்ஷ?மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீதஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ?ம்யை நம

ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்

1. க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
2. க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
3. ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
4. கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
5. க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
6. ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தததேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
7.க்லீம் ஹ்ருஷீகேசாய நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
8. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
9. ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
10. க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
11. க்லீம் க்ருஷ்ண க்லீம்

சகாதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்

ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸஅவாய
கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ

கிருஷ்ணா - ராமா

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே

ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம்
பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம்
ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ராம மந்திரம்

ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டதுராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம்எனப்படும்இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராமபிரானின் தரிசனம் பெற்றார்இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.

ஏகஸ்லோக ராமாயணம்

எல்லாவித காரிய சித்திகளும் பெறவும்மங்களம் உண்டாகவும் இந்த இராமாயணஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்

யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ? தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே

இதை தினமும் காலையிலும்மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தைமுழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.

க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம்  லப்யதே

இழந்த செல்வம் மீண்டும் பெறவும்திருடு போன பொருள் தானாக வந்தடையவும்,வரவேண்டிய பண பாக்கி வரும்கடன் தொல்லை தீரும்.

கல்வியில் சிறந்து விளங்க

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்

ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ÷க்ஷõ சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா

தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி

என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வரசரஸ்வதியின் அருள்கிட்டும்.

வாஸ்து துதி

வாஸ்து பூஜையன்று சொல்ல வேண்டியதுவீட்டில் வாஸ்து கோளாறுகள் ஏதேனும்இருந்தாலும் தினசரி இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய அவை நீங்கும்.

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரக்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்ணாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வாஸ்து காயத்திரி

ஓம் தனுர் தராயை வித்மஹே
ஸர்வ ஸித்திச்ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

ஐயப்பன் மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா,
சர்வலாபாயா
சத்ரு நாஸாயா
மதகஜ வாகனாயா
மஹா சாஸ்த்ரே நமஹ

சுப்ரமண்யர் மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ

சுப்ரமண்ய பஞ்சதசாக்ஷரீ மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஈம் நம் லம்
ஸெளசரவணபவ

சுதர்சன வழிபாடு

நீங்காத செல்வம் கிடைக்க

ஸ்ரீ நிதி : ஸ்ரீவர : ஸ்ரக்வீ ஸ்ரீலக்ஷ?மீ கர பூஜித
ஸ்ரீ ரத : ஸ்ரீவிபு : ஸிந்து கன்யா பதி ரதாஷஜ

சுகப்ரசவம் ஏற்பட

உத்தரா மாநதோ மாநீ மாநவா பீஷ்ட ஸித்தித:
பக்த பால பாப ஹாரீ பலதோ தஹநவத்ஜ

பாவங்கள் தீர

ஆஸ்ரிதாகௌக வித்வம்ஸீ நித்யா நந்த ப்ரதாயக
அஸுரக்நோ மஹா பாஹுர பீம கர்மா ஸப்பரத

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந:
தேவகீநந்தனஸ் ஸ்ரஷ்டா க்ஷ?தீஸபாபநாஸந:

எடுத்த காரியம் பூர்த்தியாக

பூர்ண போதபூர்ணரூபபூர்ண காமோ மஹரத்யுதி
பூர்ண மந்த்ர பூர்ண கர்த்ரபூர்ணஷ் ஷரட்குண்ய விக்ரஹ:

மனத்தூய்மை பெற

சந்த்ர தாமாப்ரதித்வந்த்வபரமாத்மாஸுதீர்கம
விஹத்தாத்மா மஹா தேஜோபுண்ய ஸ்லோகபுராணவித்

வாக்கு வன்மைக்கு

ஸத்கதிஸ் ஸத்வு ஸம்பந்தநித்ய ஸங்கல்ப கல்பக
வர்ணீ வாசஸ் பதிர் வாக்மீ மக்ஷõ ஸக்திகலாநிதி

புகழ் அடைய

புண்ய கீர்த்தி : பராமார்ஷீ ந்ருஸிம் ஹோ நாபி மத்யக
யஜ்ஞாத்மா யஜ்ஞ ஸங்கல்போ பஜ்ஞ கேதுர் மஹேஸ்வர

வழக்குகளில் வெற்றி பெற

ஜய ஸீலோ ஜய காங்க்ஷஜாதவேதா ஜயப்ரத
கவிகல்யாணத காம்யோ மோக்ஷதோ மோஹநாக்ருதி

எல்லா சுகங்களும் கிடைக்க

பாக்ய ப்ரதோ மஹா ஸத்த்வோ விஸ்வாத்மா விகஜ்வர
ஸுராசார் யார்ச்சிதோ வஸ்யோ வாஸுதேவோ வஸுப்ரத

எல்லா காரியங்களிலும் வெற்றிபெற

ஸர்வார்த்த ஸித்திதோ  தா விதாதா விஸ்வ பாலக
விருபா÷ஷா மஹா வக்ஷõ: வரிஷ்டோ மாதவ ப்ரிய:

உயர்ந்த பதவி கிடைக்க

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ்ஸ்தாநதோ த்ருவ:
பராத்திபரம ஸ்பஷ்டஸ்-துஷ்டபுஷ்டஸஸுபேக்ஷண:

உற்சாகம் ஏற்பட

வேத்யோ வைத்யஸ்ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:

கண்பார்வை திருந்த

அக்ரணீர் - க்ராமணீஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

சத்ருவை ஜயிக்க

ஸுலபஸ்ஸுவ்ரதஸ்ஸித்தஸ்ஸத்ருஜிச்-சத்ருதாபந:
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் -சாணூராந்த்ர நிஷூதந:

துன்பங்கள் விலக

உதீர்ணஸ் ஸர்வதஸ் - சக்ஷú-ரனீஸஸ் ஸாஸ்வதஸ்திர:
பூஸயோ பூஷணோ பூதிர-ஸோகஸ் ஸோகநாஸந:

அறிவு வளர

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுத்ஸ்ஸ்ரம் ஸதாம்கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்:

பெருமதிப்பு ஏற்பட

ஸுப்ரஸாதப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக்விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் - ஜஹ்நுர் -நாராயணோ நர:

மோக்ஷமடைய

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண:
ஸுரஸேனோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் ஸுயாமுந:

வயிற்றுவலி நீங்க

ப்ராஜிஷ்ணுர் - போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அனேகா விஜயோ ஜேதா விஸ்வயோனிபுனர்வஸு:

மருந்து சாப்பிடும் போது

தன்வந்த்ரிம் கருத் மந்தம் பணிராஜம்  கௌஸ்துபம்
அச்யுதம்  அம்ருதம் சந்த்ரம் ஸ்மரேத் ஒளஷதகர்மணி
அச்யுத அனந்த கோவிந்த நமோச் சாரணபேஷஜாத்
நச்யந்தி ஸகலா ரோகாஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
அபா மார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா
ஸதாஸ்து ஸர்வ துக்கா நாம் ப்ரசமோ வசநாத்ரே.

சங்கீத அப்பியாசத்திற்கு முன்

ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.

மேகம் இடிக்கும் போது

அர்ஜுனபால்குனபார்த்தகரீடசே வேத வாஹன
பீபத்ஸுவிஜய கிருஷ்ணஸவ்யாஸாசீ தனஞ்சய:

லட்சுமி கடாட்சம் ஏற்பட

துரிதௌக நிவாரண ப்ரவீணே
விமலே பாஸுர பாக தேயலப்யே
ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.

எல்லா வகை தோஷங்களும் விலக

துஸ்வம்னதுசகுனதுர்கதிதௌர்னஸ்ய
துர்பிக்ஷதுர்வயஸநதுஸஹதுர்யசாம்ஸி
உத்பாததாபவிஷபீதிம்அஸத்க்ரஹார்த்திம்
வியாதீம்ச்சநாசயதுமேஜகதாம்அதீச.

முயற்சிகளில் வெற்றி கிடைக்க

நமோஸ்து ராமாய ஸலக்ஷ?மணாய
தேவ்யை  தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய;
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய.

உடல்மன வலிமைகள் கிடைக்க

சிவசக்த்யா யுக்தாயதிபவதிசக்தப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவநகலு குலசஸ்பந்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாத பிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி

கவலை தொலைய

சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்திஸ்ந்நிதத்ஸ்வ.

துர்மரணம் ஏற்படாமல் இருக்க

அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம்
புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம்
த்வயி பக்திஞ்ச மேதேஹி - பரத்ரச பராங்சதிம்.

விபத்துமரணத்தை விலக்க

ஓம் ஜூம்ஸத்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முட்சீய
மாமிருதாத்ஜூம் ஓம்.

மரண பயம் நீங்க

வைகுண்டபுருஷப்ராணப்ராணதப்ரணவப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ:

பிழை பொறுக்க வேண்டுதல்

அபராத ஸஹஸர ஸங்குலம்
பதிதம் பீம மஹார்ண வோதரை
அகதிம் சரணாகதமாம் க்ருபயா
கேவல மாத்மஸாத் குரு.

மந்த்ர ஹீம் க்ரியா ஹீனக
பக்தி ஹீநம் ஸுரேச்வா
யத் பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துமே.
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம்
தாஸோ யமிதிமாம் மத்வர க்ஷமஸ்வ புரு÷ஷாத்தம்.

கற்பபூர ஆரத்தியின் போது

ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய-மாதத்தே!
யோ ராஜஸன் ராஜயோ வா ஸோமேன
யஜதேதேத ஸுவா மேதானி ஹவீம்ஷி
பவந்திஏதா வந்தோ வை தேவானாம் ஸவா:!
 ஏவாஸ்மை ஸவான் ப்ரயச் சந்திதஏனம்
புனஸ் ஸுவந்தே ராஜ்யாயதே ஸூ ராஜாபவதி
ராஜாதி ராஜஸ்ய ப்ரஸஹ்ய ஸாயினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணாய மஹாராஜாய நம:
நதத்ர ஸூர்யோ பாதி  சந்திர
தாரகம்நேமோ வித்யுதே பாந்தி குதோய
மக்னிதமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி!

மந்திர புஷ்பம் போடும் போது

யோபாம் புஷ்பம் வேதபுஷ்பவான்
ப்ரஜாவான் பசுமான் பவதிசந்த்ரமா வா
அபாம் புஷ்பம்புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி!

பிரதிக்ஷ?ணம் செய்யும் போது

யானி காளி  பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச!
தானி தானி விநச்யந்தி பிரதிக்ஷ? பதே பதே!
ஏகச்லோக சுந்தர காண்டம்
யஸ்யஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர்லீலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்யவீக்ஷ? தசகம் தக்த்வா புரீம் தாம்புன;
தீரணாப்திகபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே.

(இந்த ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்தால் சுந்தர காண்ட பாராயணம் செய்த பலன்கிடைக்கும்.)

நீராடும் போது

துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
ஹர மம் க்ஷ?ப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே:
கங்கே  யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வ பாபேப்யவிஷ்ணுலோகம் ஸகசக்தி.

விபூதி அணியும் போது

பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்
பூதிபூதிகரீபும்ஸாம் ரக்ஷõ ரக்ஷõகரீ சுபா.

உணவு உண்ணுவதற்கு முன்

ஹரிர்தாதா ஹரிர்போக்தா
ஹரிரன்னம் பிரஜாபதி:
ஹரிர்விப்ரசரீரஸ்து
புங்தே போஜயதே ஹரி:

ப்ரஹ்மார்பணம் ப்ரஹம ஹவி:
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
அஹம் வைச்வானரோ பூத்வா
ப்ராணினாணம் தேஹமாச்ரித:
ப்ராணபான ஸமாயுக்த:
பசாம்பயன்னம் சதுர்விதம்.

வீட்டிலிருந்து வெளியே போகும் போது

வனமாலீ கதீ சார்ங்கீ சக்ரீ சநந்தகீ
ஸ்ரீ மான் நாராயணா விஷ்ணுவாஸுதேவோ பிரக்ஷது
ஸ்கந்தச்ச பகவான்தேவ:
ஸோமஸ்ச்சேந்திரோ யருஹஸ்பதி:
ஸப்தர்ஷயோ நாரத்ச்ச அஸ்மான்
ரக்ஷந்து ஸர்வத:

வெளியூர் பிரயாணம் நன்கு முடிய

அக்ரதப்ருஷ்டத்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தந்வாநௌர÷க்ஷதாம்ராமலக்ஷ?மணௌ.
ஸ்ந்நத்தகவசீ கட்கீ சாப பாணதரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராமபாது ஸலக்ஷ?மண:

இரவு சாப்பிடுவதற்கு முன்

ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம் மத்யந்திரிம்பரி
ச்ர்த்தாம்ஸூர்யஸ்யநிம்ருசிச்ரததேக்ராத்தாபயேஹ நம

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ஆபத்து காலத்திலும்வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும்,தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம்.மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்றுஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறதுமுதலில் ருத்திரனும் பின் அங்காரகபகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்துநினைத்த காரியத்தை அடைந்தனர்.ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்தோறும் பூஜித்தலும், 108 முறைபாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறதுகன்னிகைகளுக்கு மங்களத்தைகொடுப்பது விவாஹாதி சோபனம்ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்ராகுகாலத்தில்துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும்ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகாலநேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும்நவக்ரகதோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம்ஸ்ரீம்க்லீம்ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும்ஹும்பட் ஸ்வாஹா

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ரட்ச ரட்ச ஜகன்மாதாதேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே

ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி

ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயேஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே:ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளேமங்கள தினமான செவ்வாய்
க்கிழமை தோறும் வணங்கத் தக்க மங்கள உருவானவளேஇந்த உலகின் மங்களத்திற்குமூலகாரணமாய் விளங்குபவளேஎல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தரு
பவளேபுண்ணியம்பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளேஒவ்வொரு மங்களவாரத்திலும் எனக்கு எல்லாவிதமான மங்களத்தையும் அளித்துக் காத்து அரு
ள்வாயாக.

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டியது

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவாஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன்வந்தடைந்து சேவிக்கின்றனரோஅப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும்அளவு கடந்தபுண்யமுள்ளதும்எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்குஇருப்பிடமான ஹே மலையேதங்களை கால் வைத்து ஏறுகிறேன் சிறந்த பர்வதமே!அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன்தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனைதாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.)

ராகவேந்திரர் மந்திரம்

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷ? நமதாம் காமதேனவே

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்

ஓம் சக்தியே ! பரா சக்தியே !
ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !

கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய

( அங்காரகசீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பதுஇதன் பொருள்.)

திருமணம் நடக்க

ஸ்ரீமன்மங்கள நாயகீ ஸஹசரம்
கல்யாண ஸந்தோஹதம்
முக்தா முக்த ஸீரௌக வந்தித
பதத்வந்த் வாரவிந்தம் முதா
த்யாயேத் ஸந்ததம் ஆதிநாயகம்
அஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம்
ஸ்ரீமத்திவ்ய ஸுதாக டேச்வர மஜம்
க்ஷ?ப்ரப் ஸாதப் ரதம்

பெண்களுக்கு நல்ல கணவன் அமைய

திருமணமாகாத கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களைமுடித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் குளித்துகுத்து விளக்கேற்றிஎல்லாம் வல்ல
சிவபெருமானை மனதில் எண்ணியவர்களாய் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறைபாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும்.

சுபப்ரணாதா பவதீ ச்ருதீ நாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம
பத் நாஸி நூந்ம மணி பாதர ஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை

குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

பெண்கள் கருவுற

காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறிதேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
பம் தரிக்கும்முழுநம்பிக்கையுடனும்தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.

கதா காலேமாதகதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி  கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.

கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய தாயுமானவர் ஸ்லோகம்

ஹேசங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே

மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யாஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.

சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம்

ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி
தஸ்யாஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது

எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம்

ஹர நம : பார்வதீபதயே
ஹர ஹர மஹாதேவ
ஜானகீ காந்த ஸ்மரணம்
ஜய ஜய ராம ராம

சுப்ரமணியர் துதி

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

மனோவியாதிஅச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

சண்முக ஸ்தோத்ரம்

காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற

ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ